எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஐயப்பன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுராந்தகம் வட்டம், வடக்குபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முரளியின் மகன் சிறுவன் தரணேஷ், ரவியின் மகன்கள் சிறுவன் ராஜா மற்றும் சிறுவன் ஆகாஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வன் கோவர்தனன் சுற்றுலா சென்ற இடத்தில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
சோளிங்கர் வட்டம், புதூர் மதுரா மாலையமேடு கிராமத்தைச் சேர்ந்த தேசன் மகள் செல்வி அஷ்வினி, சங்கர் மகன் செல்வன் தமிழரசன் மற்றும் உலகநாதன் மகள் செல்வி ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், குளக்காட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பாண்டீஸ்வரன் ஆற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை கிராமத்தைச் சேர்ந்த விஜீமோன் இயக்கிய JCB இயந்திரத்தின் மீது பாறை விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிள்ளியூர் வட்டம், மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் மகள் செல்வி விர்ஜின் பெர்னதெத் தனியார் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் ராமச்சந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன் மகன் கார்த்திகேயன் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, எதிர்பாரத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமியின் கணவர் சேதுராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் நவீன்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சத்தியமங்கலம் வட்டம், புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகணேஷ் மகன் சிறுவன் கவியாணேஷ் என்பவர் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
ஈரோடு வட்டம், வீரப்பன்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமார்(லேட்) மகன் மணிகண்டன் திருமூர்த்தி அணையில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
சத்தியமங்கலம் வட்டம், சுங்ககாரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ரங்கசாமி தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும், அந்தியூர் வட்டம், முகாசிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் மகன் ரத்னகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கழுவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் மகன் செல்வன் நவீன் மற்றும் முருகன் என்பவரின் மகன் செல்வன் சபரிதரன் ஆகிய இருவரும் ஊரணியில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ரகுராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கோரணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்த்தனாரி மகன் செல்வன் மணிகண்டன் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
மேட்டூர் வட்டம், குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் செல்வம் வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், எடப்பாடி வட்டம், செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் உத்திரகுமார் மாடு முட்டி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
மேட்டூர் வட்டம், கூணாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவின் கணவர் கனகராஜ் (எ) கருமலை கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஒரகடம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் கோபியின் மகன் செல்வன் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், கருத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாத்தப்பனின் மகன் கோவிந்தராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு: ராணா பரபரப்பு வாக்குமூலம்
07 Jul 2025மும்பை : மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.