எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராமநாதபுரம் : நான் ஒரு விவசாயி. ஆனால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. நான் ஒரு விவசாயி என்பதால்தான் பல விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
ஆனால், விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது,
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தமிழகம், இந்தியா மட்டுமன்றி, உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க, முக்கிய புனிதத்தலமாக விளங்கக்கூடிய இராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் வருகை தந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் தொழில், மீன்பிடித் தொழில் ஆகிய இரண்டு தொழில்களும் பிரதான தொழில்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டு தொழில்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக தமிழக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 48.50 கோடி மதிப்பீட்டில் விவசாய பங்களிப்போடு 94 குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2020-21ஆம் ஆண்டு ரூபாய் 31 கோடி மதிப்பீட்டில் 44 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 70 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் பருவகாலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, கோடை காலத்தில் வேளாண்மைக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், நதிகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசு மூன்று ஆண்டு காலத் திட்டம் வகுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுப்பணைகள் கட்டி, மழை காலத்தில் பொழிகின்ற நீரை சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாவட்ட மக்களின் நலன் கருதி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூபாய் 345 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள், மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எந்த மாநிலத்திலும் ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற வரலாறு கிடையாது.
அந்த வரலாற்றையும் தமிழக அரசு படைத்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிப் பகுதியில் நவீன மருத்துவமனை உருவாக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளித்து நன்மை பயக்கும் ஒரு அற்புதமான திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இராமேஸ்வரத்தில் பயணிகள் தங்கும் விடுதி கட்டும் பணி சுமார் ரூபாய் 30.96 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இப்பணி விரைந்து முடிக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்குண்டான வசதி உருவாக்கித் தரப்படும். மீனவர்களின் நலனுக்காக, மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை கையாள்வதற்கு இராமநாதபுரம், மூக்கையூர் கிராமத்தில் ரூபாய் 128.70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு 4.3.2019 அன்றும், குந்துக்கலில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் கட்டி முடிக்கப்பட்டு 19.9.2020 அன்றும் பயன்பாட்டிற்கு நான் துவக்கி வைத்தேன்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்க வேண்டுமென்ற மீனவர்களின் கோரிக்கை அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு படகின் விலையான ரூபாய் 80 லட்சத்தில், மத்திய அரசு 50 சதவிகிதம், மாநில அரசு 20 சதவிகிதம் என ரூபாய் 56 லட்சம் மானியமாக தரப்படுகிறது. எஞ்சிய தொகையை மீனவர்கள் தங்கள் சொந்த நிதி மற்றும் வங்கியின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 22 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ரூபாய் 17.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக 70 சதவிகித மானியமாக ரூபாய் 12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 232 பயனாளிகளுக்கு படகு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் முதன்முதலில் வழங்கிய அரசு தமிழக அரசுதான். இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 3,50,220 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,316.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2016-2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,40,636 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 146 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம், இராஜசிங்கமங்கலம் மற்றும் எட்டிவயல் ஆகிய இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 847 வேளாண் இயந்திரங்கள் 13 கோடியே 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக, விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின்கீழ், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதியில் 10 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கும், வனக்குடி தொழிற் பூங்கா, சக்கரக்கோட்டை தொழிற் பூங்கா அமைப்பதற்கும் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்று அம்மாவின் அரசு நீண்டகால திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படி தென்மாவட்டங்களில், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
தொழிற்சாலைக்கான நிலத்தில் 50 சதவீதம் மானியமாக கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்கு அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில் துவங்குவதற்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுக்கும்.
இதனால், தென் மாவட்டங்களில் இருக்கும் மக்கள், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் புதிய தொழில்கள் வரும்பொழுது, இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாயானது மானாமதுரை வட்டம், இடைக்காடு கிராமத்தில் வைகை நதியை கடந்து செல்கிறது. இவ்விடத்தில் 1,500 கனஅடி நீரை வைகை நதியில் திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் நிரப்பப்படும். இத்திட்டத்தின் மூலம் நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இத்திட்டத்திற்கு தோராயமாக ரூபாய் 14,000 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, இவ்வளவு அதிக செலவில் தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. இவ்வளவு செலவு செய்து, வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு தமிழக அரசுதான். பலர், விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறேன், நான் ஒரு விவசாயி. விவசாயி குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் நன்றாக உணர்ந்து, அந்த விவசாயிகளுடைய துன்பங்களை களைய வேண்டுமென்பதற்காகத்தான் எவ்வளவு செலவானாலும் அதை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த இருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
இராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்த ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால், இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
ஆரம்பத்தில், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பல நடவடிக்கைகளை எடுத்தோம். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தோம். இதன்மூலம் நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது.
அதனால்தான் இன்றைக்கு கொரோனா தொற்றுப் பரவல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இந்த நோய்த் தொற்று எவ்வாறு பரவுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொடிய நோய் இது. இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுகின்ற ஆலோசனைகளின்படி அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியதன் மூலமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றவாறு செயல்பட்டதன் விளைவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
இன்னும் குறுகிய காலத்தில், இந்த எண்ணிக்கைகளை குறைத்து, இந்நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முழுவதும் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.
இந்திய அளவில், மற்ற மாநிலங்களில் இயநோய்ப் பரவல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இந்நோய்ப் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில்தான் அதிகமான எண்ணிக்கையில், அதாவது நாள் ஒன்றுக்கு 85,000 பரிசோதனைகள் எடுக்கிறோம்.
தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது,
தமிழ்நாட்டில்தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு, குறையத் தொடங்கியுள்ளது.
குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம். வேளாண் பெருமக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் 100 சதவிகித தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தொழில் புரிபவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் 100 சதவிகித தொழிலாளர்களை வைத்துப் பணிபுரிய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. அதேபோல, எந்த ஆண்டும் இல்லாத அளவில் அதிகமான நெல் விளைச்சல் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.
இதற்கு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம். வேளாண் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்த காரணத்தால் அதிக விளைச்சல் பெறப்பட்டுள்ளது.
இதற்கு வேளாண் துறை அதிகாரிகளை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தொழில் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால் அனைத்துத் துறைகளிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அதிக வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஆய்வுக் கூட்டங்களுக்கு இடையே நேற்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் ஒரு விவசாயி. ஆனால் மு.க. ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது.
நான் ஒரு விவசாயி என்பதால்தான் பல விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால், விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின்தான் என்று கூறினார்.
மாநிலங்களவையில் வேளாண் மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, வேளாண் மசோதாவில் சாதகமான அம்சங்கள் இருந்ததால்தான் அதனை ஆதரித்துள்ளோம். பாலசுப்ரமணியத்தின் பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம் என்று முதல்வர் பதிலளித்தார்.
கோட்டையில் பா.ஜ.க. கொடி பறக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கூறிய கருத்துக்கு, கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என்று பதிலடி கொடுத்ததோடு, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
14 Jul 2025சென்னை : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது மு
-
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
14 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க உத்தரவு
14 Jul 2025சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்
14 Jul 2025சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்
14 Jul 2025கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
14 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.