எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்டாக்ஹோம் : நோபல் பரிசு தொகையாக இதுவரை ரூ.7.33 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு தொகையாக இதுவரை ரூ.7.33 கோடி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த பரிசுதொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை அறிவித்து உள்ளது.
இதன்படி நோபல் பரிசு தொகையின் மதிப்பு ரூ.81 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை வழங்கப்பட்டுள்ள ரூ.7.33 கோடி இனி ரூ. 8.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நோபல் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2012-ம் ஆண்டு முதல் நோபல் அறக்கட்டளையின் முதலீட்டு மூலதனம் ரூ.2,438 கோடியில் இருந்து ரூ.3,737 கோடியாக அதிகரித்து உள்ளது. அதிலிருந்து சுமார் 9 சதவீத வட்டி வருவாய் கிடைத்து வருகிறது.
நோபல் அறக்கட்டளையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது நோபல் பரிசின் பண இருப்பை அதிகரிக்க முடிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நோபல் அறக்கட்டளையின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக முன்பு சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2011-ம் ஆண்டு நோபல் பரிசு தொகை ரூ.8.12 கோடியில் இருந்து ரூ.6.50 கோடியாக குறைக்கப்பட்டது.
இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. இதில் அந்தந்த பிரிவுகளுக்கான பரிசு பற்றிய விவரம் இடம் பெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


