எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த சட்ட மசோதா விஷயத்தில் அனைத்தும் முடியும் தருவாயில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. அந்த பிள்ளைக்கு பெயர் வைக்க முயற்சிக்கிறார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும் எனவும் ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவிகிதம் இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேசினார்.
மதுரை மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றது.
மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று முதல் மூன்று இடம் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் 3 லட்சத்துக்கும் மேலான ரொக்க பரிசுகளை வழங்கினார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவீத இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள். பண்புள்ளவர்கள். நான் ஒரு வழக்கறிஞர். இது போன்ற படித்தவர்களை தான் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினார்.
சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும். ஏழை வீட்டில் பிறந்து அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர விரும்பும் சாமானிய, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதற்கான சட்ட மசோதாவை இந்தியாவில் தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை.
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்த நிறைவேற்றிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான். எந்த மாநிலத்திலும் இது போன்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட வில்லை.
ஆனால் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. ஆனால் பெயர் வைக்க முயற்சி செய்பவர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். போராடுவதற்கு களம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின்.
ஜெயலலிதா காலத்தில் பிற்படுத்தபட்ட மக்களுக்காக மண்டல் கமிஷன் 50 சதவிகித இடஒதுக்கீட்டு பரிந்துரையை அறிவித்தது. ஆனால் ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஏழைகள்,பிற்படுத்த பட்ட,சிறுபான்மையினர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார். அதன் தொடர்ச்சி தான் மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு , 7.5 சதவிகித இடஒதுக்கீடு விஷயம் நல்லபடியாக முடிந்து விடுமோ என்ற பயத்தில் தான் ஸ்டாலின் போராட்ட நாடகம் ஆடுகிறார்.
ஏழை மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்து இருந்தால் சட்டசபையில் இது குறித்து பேசி இருக்கலாமே. தினமும் வெத்து, வேடிக்கையாக, முகம் சுளிக்கும் வகையில் 100 அறிக்கைகள் வெளியிடும் ஸ்டாலின் ஏன் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு குறித்து அப்போதே அறிக்கை விடவில்லை? ஏன் சிந்திக்கவில்லை? ஸ்டாலினுக்கு சிந்தனை செய்யும் திறன் இருக்கிறதா இல்லையா என நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் முடிவு தெரிந்து மகுடம் சூட உள்ள இந்த நேரத்தில் மகுடம் சூட்டுவதில் பங்கு கேட்கும் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பங்காளியா பகையாளியா என தெரியவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு என்றுமே பங்காளி எடப்பாடி பழனிசாமிதான். ஸ்டாலின் பகையாளி தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப



