எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, ரூ. 67,378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்மா, மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். அம்மாவின் வழியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும், நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், நீர்நிலைகளில் ஒரு சொட்டு நீரும் வீணாகாத வகையில் ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்குவதோடு, எதிர்கால நீர் தேவையைக் கருத்தில் கொண்டு நீர்வள பாதுகாப்பு, நீர் மிகைப்படுத்தும் யுக்திகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறம்பட செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் நீர் தேக்கங்களை உருவாக்குதல், சிறிய மற்றும் பெரிய அளவிலான தடுப்பணைகள், படுகை அணைகள், புதிய ஏரிகள், கசிவு நீர் குட்டைகள் மற்றும் நீர்நிலைகளை அமைத்தல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், 89 நீர் தேக்கங்கள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்க குடிமராமத்து திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் புனரமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ. 1000 கோடியில் தடுப்பணைகள் கட்டும் மூன்றாண்டு திட்டத்தின் கீழ் இதுவரை 164 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிவேகமாக வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்கனவே உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு நீர் தேக்கங்களுடன் 5-வது நீர்த்தேக்கமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் ரூபாய் 380 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க தயார் நிலையில் உள்ளது.
இந்நீர்த்தேக்கத்திற்க்காக மொத்தம் 1485.16 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது. இதில் 800.65 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் 54.59 ஏக்கர் வனத்துறை நிலமும் அடங்கும். இத்திட்டத்திற்காக பாலவாக்கம் - சத்தியவீடு சாலையில் ஒரு பகுதியை மாற்று சாலையாக 3.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நீர்தேக்கத்தின் மூலம் புதியதாக ஏற்கெனவே பாசன வசதி பெற்ற கண்ணன்கோட்டை, இராஜனேரி மற்றும் தேர்வாய்கண்டிகை பெரிய ஏரிகளின் நஞ்சை நிலங்களான 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற 5 மதகுகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்காக உள்வாங்கி கோபுரம் அமைக்கப்பட்டு சேமிப்பு நீரினை நாள் ஒன்றுக்கு 66 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கண்டலேறு-பூண்டி கால்வாயின் தொலைக்கல் 2200 மீட்டரில் 8600 மீட்டர் நீளத்திற்கு புதிய கால்வாய் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீரை கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்த்தேக்கம் அமைக்க 7150 மீட்டர் நீளத்திற்கு மண்கரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீரை 1100 ஏக்கர் பரப்பளவில் இரண்டு முறையில் வருடத்திற்கு 1000 மில்லியன் கனஅடி நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நீர்த்தேக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக அமையப்பெறும் மேலும், நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனத்தினால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பட்டு, அதிக மழை பொழிவிற்கு வழிவகுக்கும். நீர்த்தேக்கத்தின் மூலம் மீன்வளமும் பெருக வாய்ப்புள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தினால் நீர்த்தேக்கம் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். தற்போது பெய்து வரும் பருவ மழையினால் நீர்த்தேக்கத்தில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை மாநகரத்திற்கு மாதம் ஒன்றிற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வழங்கும் நான்கு நீர்தேக்கங்கள் மூலம் 11 டி.எம்.சி. நீர் என்பது இப்பொழுது 11.75 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது. 67 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 5-வது நீர்த்தேக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று 21-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்-II மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தும், ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் II -ஆம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூபாய் 1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூபாய் 406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், அமுல்லைவாயலில் ரூபாய் 1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி விழா பேருரையாற்றுகிறார்.
இவ்விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மேலும், இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
மேலும் இதில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றுகிறார். தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், நன்றியுரையாற்றுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மருத்துவக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக அரசு அறிவிப்பு
16 Jul 2025சென்னை, நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் ஜூலை 8ம் தேதி முதல் சட்டத் திருத்தம் அ
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வெளியீடு
16 Jul 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வருகிற 19-ம் தேதி ஆன்லைனில் வெளியீடு
-
அமெரிக்காவில் திடீர் கனமழை
16 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பெய்த கனமழைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.