எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும் போது பயனடைவார்கள். இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை 4 மாதங்களிலிருந்து, 8 மாதங்களுக்கு, 31.03.2021 வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரி விலக்கு மற்றும் பதிவுக் கட்டணம் குறைத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் - கோவிட் பெருந்தொற்று காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுகள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணப்புழக்க குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தாங்கள் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்காக பிணை ஆவணம் பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை தள்ளுபடி செய்யக் கோரியிருந்தனர்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி இப்பொருள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை விரிவாக ஆய்வு செய்து சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பர் பாரத்) திட்டத்தின் கீழ் 31.03.2021 வரையிலான காலத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெறுவதற்காக பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்கும் ஆணையை முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை பிறப்பித்துள்ளது.
மேலும் குறு, மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தை 1.0 விழுக்காட்டிலிருந்து 0.1 விழுக்காடாக குறைத்தும் ஆணையிட்டுள்ளது.
மைய அரசின் சொத்து பிணையில்லா அவசர கால கூடுதல் கடன் திட்டத்தின் கீழ் சுமார் 3,09,312 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11,538.69 கோடி கடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இத்திட்டம் முடிவடையும் காலம் வரை பயனடையலாம். தற்போது, இந்திய அரசு இத்திட்டத்தினை 31.03.2021 வரை நீட்டித்துள்ளது. பதிவுக்கட்டணம் குறைப்பினால் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும் போது பயனடைவார்கள்.
இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை 4 மாதங்களிலிருந்து, 8 மாதங்களுக்கு, 31.03.2021 வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது. மேற்காணும் நடவடிக்கைகள் தற்போது கோவிட் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு இடர்களை சந்தித்து வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.


