எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும் போது பயனடைவார்கள். இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை 4 மாதங்களிலிருந்து, 8 மாதங்களுக்கு, 31.03.2021 வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரி விலக்கு மற்றும் பதிவுக் கட்டணம் குறைத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் - கோவிட் பெருந்தொற்று காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுகள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணப்புழக்க குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தாங்கள் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்காக பிணை ஆவணம் பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களை தள்ளுபடி செய்யக் கோரியிருந்தனர்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி இப்பொருள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை விரிவாக ஆய்வு செய்து சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பர் பாரத்) திட்டத்தின் கீழ் 31.03.2021 வரையிலான காலத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெறுவதற்காக பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்கும் ஆணையை முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை பிறப்பித்துள்ளது.
மேலும் குறு, மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தை 1.0 விழுக்காட்டிலிருந்து 0.1 விழுக்காடாக குறைத்தும் ஆணையிட்டுள்ளது.
மைய அரசின் சொத்து பிணையில்லா அவசர கால கூடுதல் கடன் திட்டத்தின் கீழ் சுமார் 3,09,312 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11,538.69 கோடி கடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இத்திட்டம் முடிவடையும் காலம் வரை பயனடையலாம். தற்போது, இந்திய அரசு இத்திட்டத்தினை 31.03.2021 வரை நீட்டித்துள்ளது. பதிவுக்கட்டணம் குறைப்பினால் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களைப் பெறும் போது பயனடைவார்கள்.
இந்த ஆணைக்கு முன்னரே, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அபராதமின்றி பிணை ஆவணங்கள் பதிவு செய்யும் காலக்கெடுவினை 4 மாதங்களிலிருந்து, 8 மாதங்களுக்கு, 31.03.2021 வரை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது. மேற்காணும் நடவடிக்கைகள் தற்போது கோவிட் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு இடர்களை சந்தித்து வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.