எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவை பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனாவால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவிலுக்குள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டும் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோவிலுக்குள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா எவ்வாறு நடத்தப்படும்? என்பது பற்றிய விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் இந்த ஆண்டு கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது. இதையொட்டி கோவில் நிர்வாகத்தினர், திருவிழாவை எவ்வாறு நடத்தலாம்? என ஆலோசனை நடத்தினர். இதைதொடர்ந்து, இந்த வருடமும் கோவில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை ஆகமவிதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது. வெளி பிரகாரத்தில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் ஆடிவீதி வழியாக பவனி வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 24, 25-ம் தேதிகளில் கோவில் வளாகத்திலேயே வழக்கமான திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். 26-ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் எதிர்சேவை நிகழ்வு, கள்ளழகர் திருக்கோலம் நடைபெறும். 27-ம் தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகனம், ஆண்டாள் மாலை சாற்றி கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் காலை 8.30 மணிக்கு குதிரை வாகனத்திலேயே ஆடி வீதியில் வலம் வருகிறார். 28-ம் தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம் சேவையும், காலை 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும் நடைபெறும். 29-ம் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தலும் நடைபெறும். 30-ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கும், மே 1-ம் தேதி அர்த்த மண்டபத்தில் சேவையும், 2-ம் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும். விழா நாட்களில் 30-ம் தேதி வரை, காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
மேலும் திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதும், திரி எடுத்தலுக்கும், அர்ச்சனை, மாலை சாற்றுதலுக்கு இந்த வருடமும் அனுமதி கிடையாது. மேலும் திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் தேரோடும் வீதிகள், கோவில் பஸ் நிலையம், தல்லாகுளம் வெங்கடாசலபதி கோவில் பகுதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் பகுதிகளில் அகண்ட திரை மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 5 days ago |
-
ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் : பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவு
05 Sep 2025நியூயார்க் : ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் என்று பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்
05 Sep 2025வாஷிங்டன், இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் ச
-
தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்: மும்பையில் உச்சகட்ட கண்காணிப்பு
05 Sep 2025மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள
-
செங்கோட்டையன் இன்னும் முழுதும் மனம் திறக்கவில்லை: திருமாவளவன்
05 Sep 2025மதுரை, செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
05 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமனம்
05 Sep 2025சென்னை : தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் சங்குமணி, கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓய்வு பெற்றார்.
-
தமிழகத்தில் இருவர் உள்ளிட்ட ஆசிரியர்கள் 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
05 Sep 2025டெல்லி : தமிழகத்தில் இருவர் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-09-2025.
05 Sep 2025 -
அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம் : பிரதமர் வெட்கித் தலைகுனிய வேண்டும்
05 Sep 2025போபால் : அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வே
-
மீண்டும் புதினுடன் பேச உள்ளேன் - டிரம்ப் கூறுகிறார்
05 Sep 2025வாஷிங்டன், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
-
மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் அதிகரிப்பு : காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
05 Sep 2025மேட்டூர் : 16 கண் மதகு வழியாக மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அறியாமை இருளை நீக்குபவர்கள்: விஜய் ஆசிரியர் தின வாழ்த்து
05 Sep 2025சென்னை, அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள் என்று ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் தினத்தில் த.வெ.க. தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு
05 Sep 2025கோபி : அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
-
வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
05 Sep 2025திருவனந்தபுரம் : வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை
05 Sep 2025லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே நேற்று வருகை தந்தார்.
-
இ.பி.எஸ். முடிவே எங்கள் முடிவு: செங்கோட்டையன் விவகாரத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
05 Sep 2025திண்டுக்கல், செங்கோட்டையன் கருத்து குறித்து, அ.தி.மு.க.
-
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி: நயினார் வரவேற்பு
05 Sep 2025ஈரோடு, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
கச்சத்தீவு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
05 Sep 2025சிவகங்கை, கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. ஒரு உடைந்த கண்ணாடி, அதை மீண்டும் ஒட்ட வைப்பது மிகவும் கடினம் : சி.பி.எம். பாலகிருஷ்ணன் கருத்து
05 Sep 2025புதுச்சேரி : “ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா இணைந்தால் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் அதை அவர் ஏற்க மாட்டார். அ.தி.மு.க.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: கார்கே வலியுறுத்தல்
05 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை
05 Sep 2025வாஷிங்டன், ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
5.8, 5.4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
05 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 160 கிமீ தூரத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகாவில் வாக்குச்சீட்டுகள் மூலம் இனி உள்ளாட்சி தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு அமைச்சரவை பரிந்துரை
05 Sep 2025பெங்களூரு : உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.
-
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
05 Sep 2025சென்னை : நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
05 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.