முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம் : கொரோனா 3,4-வது அலை வந்தாலும் சமாளிப்போம் : கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

சனிக்கிழமை, 15 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : கொரோனா 3,4-வதுஅலை வந்தாலும் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் கொரோனா போராளிகளாக அறிவிக்கப்பட்டு கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் செவிலியர்கள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை தாங்கினார். இயக்குனர் மோகன்குமார் வரவேற்றார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தலையில் கிரீடம் சூட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- 

கொரோனா போரை முன்னெடுத்து செல்லும் செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள் கிறேன். நான் கவர்னர் மட்டுமல்ல, டாக்டரும்தான். செவிலியர் பணியை மிக உயர்வாக கருதுகிறேன். நான் மருத்துவ மாணவியாக இருந்தபோது ஊசி போடுவதற்கு கூட செவிலியரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 

வரும்கால மருத்துவ உலகம் எப்படியிருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு செவிலியர்கள் செயல்பட வேண்டும். ஈடுபாட்டுடன் பணியை செய்யும் செவிலியர்கள் தங்கள் உடல்நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். ஒரு சில செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதை கேள்விப்படும்போது மிகுந்த வருத்தமடைகிறேன். 

அரசு எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். அரசும், சுகாதாரத்துறையும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது. இதனால் சிலர் அரசின் மீது குறைகளைக் கூறி வருகின்றார்கள். அவர்கள் குறைகளை கூறுவதற்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். 

மாநிலத்தில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்துள்ளோம். இதனால் 3, 4-வது அலை வந்தாலும் கொரோனாவை சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து