எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Monday, September 8, 2025 to Sunday, September 14, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜன தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பரணி -- இந்த வாரம் மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். பொன் பொருள் ஆபரணங்கள் வாங்குவது இமாலய சாதனையாக இருக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியம் ஏற்படும். சிலருக்கு, வங்கிக் கடன் உதவியால் அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் தொல்லைகள் ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசீரிஷம்-1,2 பாதங்கள்)
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் பல நாட்களாக திருமணத்திற்கு வரன் தேடும் நிகழ்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு, திருமண ஆசைகள் நிறைவேறும். புது ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் துறையினர் தங்கள் வளர்ச்சிக்கு அதிக மூலதனங்களை போட வேண்டியது வரும். தீய நடவடிக்கையில் ஈடுபடும் நண்பர்களை கண்காணிப்பது நல்லது. பெண் பிள்ளைகளையும் அவர்கள் போக்குக்கு விட்டால் சிக்கல்கள் வரலாம். வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் அடக்கி வாசித்தல் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம். நோய் வரும்போது சுய வைத்தியம் செய்யாமல், உரிய மருத்துவரிடம் காட்டி மருத்துவம் செய்தால் வீண் விரயங்கள் ஏற்படாது.
ரோகிணி – இந்த வாரம் கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தரும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்கள் புகுத்தி ஆதாயம் காண்பர். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியாளர்களின் ஆசைகள் நிறைவேறும். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். ஏற்படும். இரவு பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். பக்தியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். சிலருக்கு, உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபடுவது காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதங்கள் தவிர்த்து அமைதியை நிலை நாட்டுவது அவசியம். தொழில் துறையில் உங்கள் தனிப்பட்ட நிர்வாகத்திறன் வெளிப்பட்டு, நிர்வாகிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் விளக்கு வைத்து பூஜிப்பதால் ஏற்றம் உண்டாகும்.
மிதுனம்
மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள் ஏற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதப்படலாம். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் முன்னர் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து, வீட்டில் அமைதி நிலவும். பெற்றோரின் உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்தல் அவசியம். பிறமொழி பேசும் பெண்களின் நட்பினால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்கால தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது முன்னேற்றத்தைத் தரும். ஆயினும், எச்சரிக்கையுடன் முதலீடு செய்யுங்கள். ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவர்.
திருவாதிரை --- இந்த வாரம் திருப்திகரமான பணவரவால் பொருளாதார நிலை மேம்படும். தெய்வப் பிரார்த்தனைகள் மூலம், தாமதமான திருமணங்களும் தடபுடலாக நடக்கும். அரசுவகையில் எதிர்பார்த்த சிறு தொழில் முதலீடுகள் தாமதமின்றி க் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் கடன் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். சிலருக்குப் புதிய வாகன யோகம் ஏற்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனி வீடு அமையும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் பெண்களுக்கு அவர்கள் விருப்பப்படி நல்ல மணமகன் கிடைத்து, திருமண காலம் கூடிவரும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். பிற்கால நலன் கருதி உங்கள் மனதில் குழப்பத்தை தரும். அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது இழப்புகளைத் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எதிர்பார்த்தபடி எளிதில் கிடைக்கும். சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்வது நல்லது. வியாபார விருத்தியாக செல்வ நிலையும் உயரும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் மனக்கவலை அளிக்கும். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் இனிய சேவைகள் மூலம் சுற்று வட்டாரத்தில் நல்ல புகழ், கௌரவம் உயரும். சிலருக்கு எதிரிகள் பணமும் வந்து சேரும். அதன் காரணமாக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.
அஸ்தம் – இந்த வாரம் நீண்ட நாளுக்குப் பிறகு, சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும் தனவரவு உண்டு. சீரான, நடவடிக்கைகள் மூலம் ஆதாயம் காணலாம். மேடைப் பேச்சாளர்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவது எளிது. உடன் பிறப்புக்களிடயே கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு தங்கள் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் ஆகியவை கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். சுற்றத்தார் மூலம் பணவுதவி கள் கிடைக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சில தடைகளுக்குப் பிறகு, சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும். தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் லாபம் ஏற்படும். எப்போதும் பணம் விஷயம் பற்றிய சிந்தனையுடன் இருப்பார்கள். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வருமான வாய்ப்புகள் பெருகும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். வியாபார நிமித்தமாக தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும்..
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு தேவையான வங்கிக் கடன் உதவிகள் கிடைத்து தொழில் சிறக்கும். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவர்.
திருவோணம்- இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். அதன் காரணமாக பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். சேமிப்புகளில் இருக்கும் பண நிலை கூடும். பெண்களால் லாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்பம் நிலைத்திருக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. வேலைக்கான போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் உடன் பிறப்புக்களின் உதவியால் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். வங்கிக் கடன்களை பெற்று, புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தி திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றல் என வீசும். தாமதமானாலும், மணமேடை ஏறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். எடுத்துக் கொண்ட புதிய திட்டங்களில் எதிர்பாராத தாமதங்கள் தடைகள் ஏற்படலாம். உழைப்பு அதிகமாக அதற்கு ஏற்ப போதுமான ஊதியம் இருக்காது. அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம். ஆனால், அரசியல் பெரும் புள்ளிகளின் ஆதரவால், பதவிவுயர்வு கள் சுலபமாக கிடைக்கும்.
பூசம் -- இந்த வாரம் நீண்ட நாளுக்குப் பிறகு, சீரான பொருளாதார நிலை ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நீடிக்கும். உங்கள் செயல்திறன் கூடி தனவரவுகள் அதிகரிக்கச் செய்யும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனி வீடு அமைய, வங்கிக் கடன்கள் கிடைக்கும்.. ஆயினும், புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், வில்லங்க விவகாரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். அதன் காரணமாக லாபமும் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம்.
ஆயில்யம் – இந்த வாரம் கை நிறைய பணம் இருப்பதால் மனம் நிறைய மகிழ்ச்சி பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறன், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். அதிகாரம் மிக்க பதவிகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தானே தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் பிறக்கும். செல்வாக்கு மிக்க நபர்கள் உதவியால் உங்கள் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும்.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவு அதிகரிக்கும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். பிராயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரம். லாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளை கையாளுவீர்கள். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அபராதம் கட்ட நேரும்.
பூரம் – இந்த வாரம் அழகிய, புதிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். பூஜா வழிபாடுகளால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களை காட்டிலும் அரிய சாதனைகள் புரிவார்கள். சிலரின் உடல் நலிவுறும். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்கள், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாத தாகும். தாய் மாமனுக்கு உங்களால் நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு, உயரிய கௌரவத்தையும் அடைவீர்கள். தந்தை வழி உறவுகள் மூலம் நன்மை ஏற்படும். வியாபார சம்பந்தமான தொலை தூரம் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்குப் பணவரத்து அதிகமாக, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். பெண் பணியாளர்களுக்கு அரசு உதவிகள் உடனடியாக கிடைக்கும். சிலருக்குக் குழந்தைகள் மூலம் தொல்லை மற்றும் அவமானங்கள் ஏற்படலாம். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு அருந்த முடியாத நிலை ஏற்படலாம். பயணங்களில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம் தேவை.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். உங்களுக்குத் தெய்வ சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும். நீண்ட காலத்திற்குப் பிறகு, ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எனவே, ஆசிரியர்கள் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும்.
சுவாதி – இந்த வாரம் புதிய வியாபார யுக்திகள் மூலம் அதிக லாபம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். இடைவிடாத வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் தொலைதூர செய்திகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதன் மூலம் வருவாய் பெருக்கமும் ஏற்படும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்படும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி, லாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். தொழிலாளர்களை அனுசரித்து சென்றால், உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். பிரச்சனைகளை குறைக்க குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும் அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.
ரேவதி- இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாகக் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு, விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகம், ஆடை ஆபரண சேர்க்கை, எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்கு தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும்.
பூராடம் – இந்த வாரம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பீர்கள். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரும். அரசு பணிபுரியும் பெண்களுக்கு அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரைவில் அவர்கள், பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு கூடும். திருமண வயதை எட்டிய பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். புதிய தொழில் தொடங்க உங்களால் எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். உங்களுக்கு ஏற்படும், திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். சில நேரங்களில் சுறுசுறுப்பான நிலையும், மனோபயம் ஆகியவை நிலவும். அரசியல்வாதிகளுக்கு திடீர் பதவிகள் கிடைக்கும். இளைஞர்கள் வானமே எல்லை என, பட்டாம்பூச்சி போல் பறந்து சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் திரிவர்.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் பண வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். பெண்களின் அறிவுத்திறன் கூடும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதர்மங்கள் செய்வார்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அனுஷம் – இந்த வாரம் பல தடைகளுக்குப் பிறகு, சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகளால் வீடே விழாக்கோலம் காணும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரிய செய்திகள் வரும். செலவுகளும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் நல்ல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று கேட்டு மகிழ்வார்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் திடீரென இடமாற்றங்கள் ஏற்படலாம். புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவார்கள். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை – இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவீர்கள். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். உறவு மற்றும் நண்பர்கள் மூலம் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். வியாபார வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. மேடைப் பேச்சாளர்கள் வாக்கால் வருமானமும், புகழும் பெறுவர். அதிகார வர்க்கத்தினர் மூலம் நன்மைகள் பல ஏற்படும்
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப்பேறு, தடைப்பட்டிருந்த புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும்.
சதயம்- இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். நண்பர்கள் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான் அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் அன்பு மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உறவுகளை அனுசரித்து சென்றால், அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்தல் வழியாக பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் கடின உழைப்பே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
தி.மு.க.வி் செங்கோட்டையன் இணைந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
06 Sep 2025நெல்லை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
-
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் கெடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
-
தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டு விட்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
06 Sep 2025சென்னை : தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய் - காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம்
06 Sep 2025திருச்சி : தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
-
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 7 பேருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
06 Sep 2025சென்னை : தமிழகத்திற்கு வரும் முக்கிய விருந்தினர்களில் யார்-யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு
06 Sep 2025சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
-
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
06 Sep 2025கொச்சி : ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
-
செங்கோட்டையன் பதவி பறிப்பு: புதிய பொறுப்பாளரை நியமித்தார் எடப்பாடி
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவருடைய பொறுப்புக்குபுதிய பொறுப்பாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் தேர்வு
06 Sep 2025பாங்காக் : தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் தேர்வு செய்யப்பட்டார்.
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
06 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
மொரீசியஸ் பிரதமர் 9-ம் தேதி இந்தியா வருகை
06 Sep 2025புதுடெல்லி : மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் வருகிற 9-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Sep 2025லண்டன் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.
-
இந்தியா - அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
06 Sep 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
அமித்ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு
06 Sep 2025புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசினார்.
-
அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
06 Sep 2025காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
-
தங்கம் விலை கடந்து வந்த பாதை
06 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
-
செங்கோட்டையன் மீதான நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
06 Sep 2025சென்னை : பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.