எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொலிக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(45). இவர்கள் 2 பேரும் சேர்ந்து, பெருந்துறை பட்டகாரன்பாளையத்தில் ‘ஆர்.கே. ஈமு கோழி பார்ம்’ என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு ஈமு கோழிப்பண்ணை நடத்தினார்கள். அந்த பண்ணையில் முதலீட்டாளர்கள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள் தரப்படும். மேலும் பராமரிப்பு செலவு, தீவனம் ஆகியவை வழங்கப்படும். இது தவிர ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரமும், போனசாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும். பின்னர் 3 ஆண்டுகள் கழித்து அவர்கள் செலுத்திய ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் திருப்பி அளிக்கப்படும் என்று அதன் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த பண்ணையில் பணம் முதலீடு செய்தனர். சில மாதங்கள் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் பணம் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பெருந்துறை பெருமாபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் 110 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.60 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 21 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராத தொகையில் ரூ.1 கோடியே 20 லட்சத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.எஸ்.ரவி தனது உத்தரவிட்டார்.
தீர்ப்பு கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈமு கோழி மற்றும் கோழி பண்ணை மோசடி வழக்குகளில் தீர்ப்புக்கூறும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பது அதிகரித்து வருகிறது. இந்த கோர்ட்டில் கடைசியாக தீர்ப்பு கூறப்பட்ட 2 வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள்: லல்லு பிரசாத் யாதவ் சூசகம்
06 Nov 2025பாட்னா, ரொட்டியை திருப்பி போடுகள் என்று லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிச. 2-ல் தொடங்குகிறது: மத்திய அமைச்சர் தகவல்
06 Nov 2025புதுடெல்லி, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. தகவல்
06 Nov 2025சென்னை: வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
அபராதம் செலுத்தாததால் 30 ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
06 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்
06 Nov 2025புதுடெல்லி, ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு
06 Nov 2025புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
-
இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்தவதி தொடர்பும் இல்லை: பிரேசில் மாடல் அழகி தகவல்
06 Nov 2025பிரேசிலியா, இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரேசில் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.
-
சோமாலியா கப்பல் மீது திடீர் தாக்குதல்
06 Nov 2025லண்டன், சோமாலியா கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய் - வைகோ
06 Nov 2025சென்னை: காகிதக் கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார் விஜய் என்று வைகோ தெரிவித்தார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை: தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி: டி.டி.வி. தினகரன் தகவல்
06 Nov 2025சென்னை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
06 Nov 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பீகார் முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: 60.13 சதவீத வாக்குகள் பதிவு
06 Nov 2025பாட்னா, பீகாரில் நேற்று 121 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.


