எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகிலேயே மிகவும் பழமையான வெப்பமண்டல மழைக்காடுகளான டெய்ன்ட்ரீ மழைக்காடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதிக்குடிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் ஆதிக்குடி சமூகத்துக்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் கீழ் இந்த காடுகள் ஒப்படைக்கப்படுகின்றன.
ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மழைக் காடுகள் சுமார் 18 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஆதிக்குடிகள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர். தற்போதைய ஒப்பந்தத்தின்படி குயின்ஸ்லாந்து மாகாண அரசு மற்றும் ஈஸ்டர்ன் குக்கு யலாஞ்சி ஆதிக்குடி மக்கள் ஆகியோர் இந்த மழைக்காடுகளை ஒன்றாக நிர்வகிப்பார்கள். கிரேட் பேரியர் ரீஃப் பவளத்திட்டை ஒட்டி இந்த மழைக் காடுகள் அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் இந்த மழைக் காடுகளும் ஒன்று.
முத்தம் கொடுக்க தடை நீக்கம்
பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவியதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் கலாசாரத்தை பொதுமக்களால் தொடர முடியவில்லை.
பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டது. மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். எனவே பிரான்ஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
புதிய மின்சாரக் கார் அறிமுகம்
பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை நேற்று அறிமுகம் செய்தது. அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார். 100 கி.வாட் பேட்டரி கொண்ட இந்த மின்சாரக் காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் கூறி உள்ளது.
மின்சார காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கெனவே ரோல்ஸ் ராய்ஸ், அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் மக்கள்தொகை சரிவு
சிங்கப்பூர் மக்கள்தொகை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. கொரோனா காரணமாக சிங்கப்பூரில் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.
அதில், “சிங்கப்பூரின் மக்கள்தொகை 1970-ம் ஆண்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை கடந்த ஆண்டை விட 4.1 % குறைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்துள்ளது. மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைந்தும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோவில் பாலியல் வன்கொடுமை
காங்கோ நாட்டில் பணியாற்றிய உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எபோலோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் காங்கோ நாட்டில் பணியமர்த்தப்பட்டனர்.
அந்த ஊழியர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 29 பேர் கர்ப்பமான நிலையில், பலர் கரு கலைப்புச் செய்துள்ளனர். இச்செயலால் உள்ளம் உடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
தங்கம் விலை குறைப்பு
20 Aug 2025சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
தனது திருமண நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை
20 Aug 2025சென்னை : எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூற
-
அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா: அமித் ஷாவுக்கு முதல்வர் கண்டனம்
20 Aug 2025சென்னை, அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்த அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
-
கேள்வி கேட்பதே தேச துரோகமா? - மூத்த பத்திரிகையாளர்களுக்கு அசாம் மாநில போலீஸ் சம்மன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
20 Aug 2025சென்னை : ‘தி வயர்’ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர்
-
இன்று த.வெ.க. மாநில மாநாடு: மதுரையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
20 Aug 2025மதுரை : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுவதால் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
தலைநகர் டெல்லியில் பரபரப்பு: 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
20 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறது மும்பை
20 Aug 2025மும்பை, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது மும்பை.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்
20 Aug 2025சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
-
ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம்
20 Aug 2025ராஞ்சி, ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.
-
சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக அறிவிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
20 Aug 2025மதுரை : சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக அறிவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கியது ஊட்டி
20 Aug 2025ஊட்டி : மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது
-
நெல்லை பூத் கமிட்டி மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி: பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
20 Aug 2025திருநெல்வேலி : திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
-
இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்
20 Aug 2025திருமலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு- அஸ்வின்
20 Aug 2025டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
-
துணை கேப்டன் பதவியில் இருந்து படேல் நீக்கம்; விளக்கம் கோரும் முன்னாள் வீரர்
20 Aug 2025மும்பை, துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்தனர்.
-
நயினார் தலைமையில் நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு: தமிழக பா.ஜ.க.
20 Aug 2025சென்னை : நயினார் தலைமையில் நாளை நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடப்பதாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
ஒண்டிவீரன் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
20 Aug 2025சென்னை : ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
-
பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா: பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.
-
பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு
20 Aug 2025புதுச்சேரி, பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளதாக நாராயணசாமி பேசினார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு ஏன்..? அமெரிக்கா புது விளக்கம்
20 Aug 2025நியூயார்க் : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
-
மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் : ராஜ்கோட்டை சேர்ந்தவர் கைது
20 Aug 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால்
-
த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்: மாவட்ட கலெக்டர்
20 Aug 2025மதுரை : மதுரையில் நேற்று த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடவும் சாலையோர வியாபாரிகளுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.