எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.22 - திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தமாக விளை நிலங்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, மிகப் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும், அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுவதும் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையம் கிராமங்களுக்கு உட்பட்ட 160 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கு, சென்னை, கோபாலபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு விற்க விற்பனைப் பத்திரம் தயார் செய்யப்பட்டு, திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 28.10.2010 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்தவர்கள் மேற்படி கிராமங்களுக்குச் சென்று அங்கு காலம் காலமாக தங்களுடைய பட்டா நிலத்தில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிய போது, எங்களுக்கு பத்திரப் பதிவு முக்கியம். பட்டாவின் நம்பகத்தன்மை, நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விசாரணையில் ஈடுபட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பதிவுத் துறைத் தலைவரோ, சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையத்தில் 160 ஏக்கர் நிலம் குறித்து விற்பனை ஆவணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார். இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
மேற்படி விற்பனையின் மூலம் 1,200 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராம மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மேற்படி பிரச்சினை குறித்து விவாதிக்க கட்சியின் சார்பில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், துப்புறவுப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும், நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், திருத்தணி நகருக்குள் உள்ளூர் பேருந்து நிலையமும், நகருக்கு வெளியே வெளியூர் பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருத்தணி நகருக்கு உள்ளே வரும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை இடித்துவிட்டு வேறு பாலம் அமைக்க மைனாரிட்டி தி.மு.க. அரசு முடிவு எடுத்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை தரப்படுவதில்லை என்றும், வீட்டு வரி விதிப்பில் ஒழுங்கான நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
எனவே, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற, திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூன்று கிராமங்கள் விற்பனை குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருத்தணி கோ. அரி, எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.