எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயு வெளியேறியது தொடர்பாக கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 55-ன் கீழ் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், க.பாலகிருஷ்ணன், கே.பாலபாரதி, ம.கலை அரசு, அ.கணேஷ்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோர்களால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில் அறிக்கை வருமாறு:-
இத்தொழிற்சாலைக்கு எதிராக நேஷனல் டிரஸ்ட் ஃபார் க்ளீன் என்விரான்மெண்ட் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்தொழிற்சாலையின் கடந்த கால நிகழ்வுகளையும், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் மண் மற்றும் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் இருப்பது அறியப்பட்டதை கருத்தில் கொண்டும் மற்றும் இதர ஆவணங்களை பரிசீலித்தும் கடந்த 28.9.2010 அன்று மேற்படி தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடையுத்தரவு பெற்று தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டுஅதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேற்படிஅறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இத்தொழிற்சாலையை அறிவுறுத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து கடந்த செப்டம்பர் 2012-ல் தொழிற்சாலையை ஆய்வு செய்து, அதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இதுவரை தொழிற்சாலையின் மீது வாரியம் மேற்கொண்ட கண்காணிப்பு பற்றிய ஆவணங்களை கடந்த 6.12.2012 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 2.4.2013 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பில் 2010-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து, ஆலையை செயல்பட அனுமதி வழங்கியதுடன் இவ்வாலை சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.100 கோடி அபராதமும் விதித்துள்ளது.
இதற்கிடையில் 23.3.2013 அன்று காலை 7 மணியளவில் தூத்துக்குடி கீழசண்முகாபுரம், புதுகாலனி பொதுமக்களிடமிருந்து கண் எரிச்சல் மற்றும் தொண்டை அடைப்பு முதலிய பாதிப்புகள் இருப்பதாக தொலைபேசி மூலம் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிப்காட் வளாகத்தினுள் செயல்படும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தொழிற்சாலையை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வாரிய உறுப்பினர் செயலரும் 24.3.2013 அன்று தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கீழ்கண்ட விவரங்கள் அறியப்பட்டது.
தாமிர உருக்காலையின் குளிரூட்டும் குழாய்களில் ஏற்பட்ட கசிவினை சரி செய்ய 21.3.2013 அன்று உருக்காலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 23.3.2013 அன்று அதிகாலை துவக்கப்பட்டது. இத்தருணத்தில் (23.3.2013 அதிகாலை 2.15 ஏ.எம்.- 2.45 ஏ.எம்.) சென்னை வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தொடர் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமில பிரிவின் புகைப் போக்கியிலிருந்து வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடின் அளவு 2103.23 மி.கி.- க.மீ. இருந்து 2939.55 மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தர அளவு 1250 மி.கி.- க.மீ. விட அதிகமாக இருப்பது அறியப்பட்டது.
மீண்டும் 23.3.2013 அன்று காலை 9.15 ஏ.எம்.- 11.15 ஏ.எம். மணியளவில் இதன் அளவு 1767.65 மி.கி.- க.மீ. இருந்து 2941.12. மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விட கந்தக டை ஆக்ஸைடு அளவு அதிகமாக பதிவாகியிருந்ததை அறிந்து இதனை உடனடியாக சரி செய்யும்படி வாரிய தொடர் காற்று தர கண்காணிப்பு மையத்திலிருந்து மின் அஞ்சல் மூலம் தொழிற்சாலைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சாலையிலிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை.
23.3.2013 அன்று காலை மீளவிட்டான், அண்ணாநகர், பிரையன்நகர், ஜார்ஜ் ரோடு, திவிபுரம் ஆகிய பகுதி பொதுமக்கள் கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தூத்துக்குடிமாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் இப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை கேட்டுக்கொண்டார்.
சஐஞநஏ (சஹசிடுச்டூஹங் ஐடூஙூசிடுசிசீசிடீ ச்க் ஞஷஷசீஙீஹசிடுச்டூஹங் நஹக்டீசிநீ ஹடூக்ஷ ஏடீஹங்சிகீ) பரிந்துரைகளின் படி சுற்றுப்புறக் காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3) -க்கு மிகைப்படும்போது மனிதனுக்கு கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனினும் மேற்குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் காற்றுத் தொடர் கண்காணிப்பு கருவி இல்லாமையால் சுற்றுப்புற காற்றில் கந்தக டை ஆக்ஸைடின் அளவை துல்லியமாக அறிய இயலவில்லை. மேலும் 23.3.2013 அன்று காலை அப்பகுதிகளில் மேற்படி புகாரின்படி சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு குறைந்தபட்சம் 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3) அளவிற்கு அதிகமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
23.3.2013 அன்று நடந்த நிகழ்வுகளை அறிவுறுத்தி மூன்று நாட்களுக்குள் அதற்கான விளக்கம் அளிக்குமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் முகாந்திரக் கடிதம் அனுப்பியது. இதற்கு தொழிற்சாலை 27.3.2013 நாளிட்ட கடிதத்தில் விளக்கம் அளித்தது. அதில் 23.3.2013 அன்று கந்தக அமில நிலையத்தின் புகைப் போக்கியின் வழியாக வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடு வாயுவின் அளவை தொடர்ந்து அளவிடும் கருவியினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அத்தருணத்தில் மேற்படி கருவியின் அளவீடுகள் பராமரிப்பு நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை தமது தாமிர உருக்காலையை பராமரிப்பதற்காக தற்காலிகமாக நிறுத்துவதையும் மீண்டும் அதனை இயக்குவதையும் வாரியத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலை அவ்வாறு தெரிவிக்கவில்லை. வாரிய தொடர் கண்காணிப்பு மையத்தில் பதிவான அளவினை பரிசீலனை செய்யும்போது 23.3.2013 அன்று காலை தொழிற்சாலையின் கந்தக அமிலப் பிரிவிலிருந்து கந்தக டை ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்றில் கலக்கப்பட்டது உறுதி செய்யப்படுகிறது. இதுவே, பொதுமக்களின் புகாருக்கு காரணமாக இருந்திருக்கிறது.
தொழிற்சாலையின் விளக்கத்தை நிராகரித்து 29.3.2013 அன்று வாரியம் பிரிவு 31 ஏ காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981-ன் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்.,) தாமிர உருக்காலை பிரிவினை மூடுவதற்கும் மற்றும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் உத்தரவிட்டது. அதன்படி 30.3.2013 அன்று தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேற்படி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 29.3.2013 நாளிட்ட மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பினை துண்டிப்பதற்கான உத்தரவு ஆகியவற்றை எதிர்த்து ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு 12.4.2013 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் விசாரணைக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது இடைக்கால உத்தரவில், இந்நேர்வு தொடர்பாக இரண்டு பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பதற்கும், இக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும் எனவும் இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து ஒருவரும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. மேலும், இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் 18.4.2013 அன்று வெளியிடப்படும் எனவும் இக்குழு ஆலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆலையை இயக்கி காட்ட வேண்டும் எனவும் இந்த ஆய்விற்குப் பின் நிபுணர் குழுவின் அறிக்கையை 29.4.2013 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை



