எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மண்டபம்,ஜூலை.8 - இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் மீண்டும் நேற்று முன்தினம் நடந்துள்ளது. மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகுகளில் இருந்த 13 மீனவர்களை சிறைபிடித்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ாமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து 6-ந் தேதி பிற்பகலில் 521 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில் பரமக்குடி அரியனேந்தல் பகுதியை சேர்ந்த ராமு மகன் முத்திருளாண்டி, பாம்பன் தெற்குவாடியை சேர்ந்த பெனிச்சர் என்பவரின் மகன் லங்க்ஸ்டன், தங்கச்சிசமடம் சூசையப்பர் பட்டிணத்தை சேர்ந்த ஜெபமாலை மார்ட்டின் மகன் சூசை ஆகிய 3 பேரின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த படகில் நாகாச்சி கருப்பையா மகன் பஞ்சவர்ணம்(வயது55), பெருங்குளம் முத்துராக்கு மகன் முத்துச்சாமி(60), முனியாண்டி மகன் கணபதி(50), மண்டபம் வெள்ளையன் மகன் முனியாண்டி(55), முனியாண்டி மகன் மணிகண்ட்ஸ்வரன்(23), மண்டபம் கருப்பையா மகன் நாகசாமி(30), அக்பர்(35), தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டிணம் அடிமை மகன் ஜபருல்லா(28), அவரின் தம்பி ஜென்சன், பெருங்குளத்தை சேர்ந்த கருப்பையான மகன் ராஜு(50), மண்டபம் மீனவர்காலனி ஜெபஸ்டியான்(26), ஜேம்ஸ் மகன் லிவிங்ஸ்டன் உள்பட 13 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் கடல் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து விடும் அபாய நிலையின் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இதுபோன்ற மீனவர்களை சிறைபிடித்து சென்று வருவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.


