எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்தின் பிரபல ஆல்ரவுண்டர் சாம் கரண் தனது முதல் டி20 சதத்தினை நிறைவு செய்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சர்ரே, ஹேம்ஸ்ரி அணிகள் மோதின. டாஸ் வென்ற சர்ரே பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹேம்ஸ்ரி அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபடசமாக டாபி ஆல்பர்ட் 66 (45), ஜேம்ஸ் வின்ஸ் 23(11), லியாம் டாவ்ஸன் 19 (9) அடித்தார்கள்.அடுத்து ஆடிய சர்ரே அணியில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் சாம் கரண் இறங்கினார்.
13-வது ஓவரில் தனது அரைசத்ததினை நிறைவு செய்த சாம் கரண் 58 பந்துகளில் தனது முதல் சத்தினை (102)அடித்து அசத்தினார். இதில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் அடித்து சதத்தினை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 19.1 ஓவரில் 188/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது சர்ரே அணி. சாம் கரண் இதுவர 191 இன்னிங்ஸில் விளையாடி 3323 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 133.29. 18 அரைசதம், 1 சதம் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட சாம் கரண் தொடக்க வீரராக களமிறங்கி சரியாக விளையாடவில்லை. சிஎஸ்கே அணியில் நம்,4,5,6இல் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரராக இருந்தார் சாம் கரண்.
அமைச்சர் உதயநிதி உதவி
தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய சைக்கிள் பந்தய வீரர் பிரதீப் சங்கருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக ரூ,16 லட்சம் மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிளையும், வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு ரூ,2.8 லட்சம் மதிப்பிலான வில்வித்தை உபகரணத்தையும், உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகாராஜாவுக்கு அமெரிக்காவில் உயர்தர பயிற்சி பெற ரூ,1.20 லட்சத்திற்கான காசோலையையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த உதவி அளிக்கப்பட்டது.
ஐ.சி.சி.க்கு ரூ.167 கோடி இழப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்தியால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 9-வது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2 முதல் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற்றன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதல் நியூயார்க் நகரில் அரங்கேறியது.அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அங்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி-க்கு 20 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.167 கோடி இருக்கும். நாளை வெள்ளிக்கிழமை கொழும்புவில் நடைபெறும் ஐ.சி.சி வருடாந்திர மாநாட்டில் இந்த இழப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதே மாநாட்டில் மற்றொரு விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. அதாவது, பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவை ஐ.சி.சி தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதனால், இந்தக் கூட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜடேஜா கிரிக்கெட் பயணம்?
உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார். ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இங்கி., 416 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நேற்று முன்தினம் (ஜூலை 18) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 121 ரன்கள் (15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக பென் டக்கெட் 71 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர் மற்றும் காவெம் ஹாட்ஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இரண்டாம் நாளான நேற்று (ஜூலை 19) மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி