எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதற்கு இங்கிலாந்து ஒவ்வொரு வருடமும் 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதில் ஜோ ரூட் 800 - 1000 ரன்கள் அடித்தால் சச்சினை முந்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் பாண்டிங் இது குறித்து பேசியது பின்வருமாறு., "33 வயதாகும் அவர் இன்னும் 4000 ரன்கள் பின்தங்கியுள்ளார். ஒரு வருடத்தில் இங்கிலாந்து 10 - 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் ரூட் 800 - 1000 ரன்கள் அடித்தால் 3 - 4 வருடத்திலேயே அங்கே செல்ல முடியும்.
அதற்கு 37 வயதாகலாம். அத்துடன் தற்போதுள்ள பார்ம் அப்படியே தொடர்ந்தால் அதற்கான சாத்தியம் உள்ளது. கடந்த சில வருடங்களாக ஜோ ரூட் தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறார். பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 30 வயதின் ஆரம்பத்தில் உச்சத்தை தொடுவார்கள் என்று சொல்வார்கள். ஆரம்பக் காலங்களில் அரை சதத்தை அடித்த ரூட் அதை சதமாக அடிப்பதற்கு தடுமாறினார். இருப்பினும் சமீப காலங்களில் பெரும்பாலான அரை சதங்களை அவர் பெரிய சாதமாக மாற்றுகிறார். அதுவே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது" என்று கூறினார்.
இந்தியா வெல்லும்: ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைபயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ஐசிசி இணையதளத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா,முகமது ஷமி ஆகியோர் உடற்தகுதியுடன் உள்ளனர். இவர்களுடன் முகமது சிராஜும் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்றோரும் பெஞ்ச் வலிமையும் சிறப்பாக உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்றே கருதுகிறேன்.
இதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஏனெனில்பந்து வீச்சாளர்கள் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள். இந்திய அணியால் சிறப்பாக பேட் செய்யமுடிந்தால் ஆஸ்திரேலிய அணியைமீண்டும் ஒரு முறை தோற்கடிக்கலாம். கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இரண்டு முறை தோற்கடித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா வெல்லவில்லை. இதன் காரணமாகவே கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளாக இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி வீரர்கள் விலகுவது வாடிக்கையாகி உள்ளது. ஏற்கனவே வில்லியம்சன், டிரெண்ட் பவுல்ட், லாக்கி பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து விலகி சாதாரண வீரராக விளையாட உள்ளதாக அறிவித்தனர். அந்த வரிசையில் தற்போது பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சாதாரண வீரர்களாக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக தமது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கான்வே தெரிவித்துள்ளார். அதே சமயம் தாம் விரும்பும் தொடர்களில் தொடர்ந்து நியூசிலாந்துக்காக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் இந்த செயல்பாடுக்கு அனுமதியளித்த நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது நான் எடுத்த இலகுவான முடிவல்ல. ஆனால் இந்த நேரத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதுவே சிறந்தது என்று நான் நம்புகிறேன். இப்போதும் நியூசிலாந்துக்காக விளையாடுவது என்னுடைய உச்சமாக இருக்கிறது. நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதிலும் நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதனால் அடுத்ததாக வரும் டெஸ்ட் தொடர்களில் நான் விளையாட உள்ளேன். பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தேர்வானால் விளையாட தயாராக உள்ளேன்" என்று கூறினார்.
மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், செக் நாட்டு வீரர் ஜிரி லெஹெகாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் மெத்வதேவ் 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பிரான்சின் வர்வரா கிரசிவாவுடன் மோதினார். இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-7 (8-10), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
21 Jul 2025திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடு
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு
21 Jul 2025புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்
21 Jul 2025மான்செஸ்டர் : காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
பன் பட்டர் ஜாம் திரை விமர்சனம்
21 Jul 2025கல்லூரி மாணவரான நாயகன் ராஜு, தோழி பவ்யாவை காதலிக்கிறார்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை: பார்லி.யில் அமைச்சர் தகவல்
21 Jul 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
அந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன்: ஹர்பஜன்
21 Jul 2025மும்பை : ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.