எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் 2008 -ம் ஆண்டு அறிமுகமானார். 2022-ம் ஆண்டு வரை 171 போட்டியில் விளையாடி 1500-க்கும் மேற்பட்ட ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து சென்னை அணியுடனே பயணிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.அந்த வகையில் சென்னை அணியின் நிர்வாகமும் அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியிருந்த அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஓய்வு அறிவிப்பு வெளியான கையோடு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராகவும் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்காக பிராவோ மாறியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பிராவோ இதுகுறித்து கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது, "நான் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காக புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தை பகிர தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.
_______________________________________________________________________________
சிறந்த கேப்டன் கும்ப்ளே:யுவராஜ் சிங் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இவர் 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 750 ரன்களும் குவித்துள்ளார். 2019ம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அனில் கும்ப்ளே தாம் பார்த்த சிறந்த இந்திய கேப்டன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக அணி தடுமாற்றமாக செயல்படும்போது ரிக்கி பாண்டிங்கை போல கும்ப்ளே கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அனில் கும்ப்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அனில் கும்ப்ளே சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும்போது பந்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தாமே தைரியமாக எடுக்கும் அணுகுமுறையை கொண்டவர். அதேபோல விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் நான் பந்து வீசுகிறேன் என்று அவர் சொல்வார். அது போன்ற அணுகுமுறையை கொண்டவர்தான் சிறந்த லீடர் என்று நான் நினைத்தேன். அதனாலேயே ரிக்கி பாண்டிங் போன்ற கேப்டனின் அணுகுமுறையை பற்றி இங்கே நான் பேசுகிறேன். சூழ்நிலை கடினமாக இருக்கும்போது அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பாண்டிங் அணிக்காக பேட்டிங் செய்வதற்கு தயாராக இருப்பார்" என்று கூறினார்.
_______________________________________________________________________________
பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற அர்ஜூன், ஹரிகாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார். ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிர் அணிகளில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அா்ஜுன் எரிகைசி, டி.ஹரிகா ஆகியோருக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ரொக்கமாக ரூ.25 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 97 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரே போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மாநில விவசாய அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் செஸ் வீரர்களை முதல்வர் பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், நாடு திரும்பிய சாம்பியனான அணியினருக்கு தில்லியில் புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்ற போது அகில இந்திய செஸ் சம்மேளனம் ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________
வங்கதேச ரசிகர் மீது தாக்குதல்
இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைக்காண வங்கதேசத்தில் இருந்து ‘சூப்பர் ஃபேன்’ டைகர் ராபி என்பவர் புலி வேடமணிந்து வந்துள்ளார். இந்திய அணி ரசிகர்கள் அவரிடம் இருந்து வங்கதேச கொடியைப் பிடுங்கி எறிந்து விட்டு அவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராபியை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறுகையில், “டைகர் ராபி புலி வேடம் அணிந்து வந்து சி ஸ்டாண்டில் அமர்ந்திருந்ததாகவும், அவரிடம் இந்திய அணிகள் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறினார். ஆனால், அவரை அடித்ததற்கான எந்த விவரமும் தெரியவில்லை” என்றார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “டைகர் ராபி சி ஸ்டாண்டின் பால்கனியில் புலி வேடம் அணிந்து இந்திய அணி பற்றி கோஷமிட்டதால் ரசிகர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அவரது வயிற்றிலும் குத்தி காயப்படுத்தியுள்ளனர். வலியால் துடித்த அவரை பால்கனியில் இருந்த காவலர் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இருப்பினும், அவருக்கு மைதானத்தில் இருந்தவர்கள் மூலம் முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது: அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
18 Sep 2025பியாங்யாங்: அதிபர் கிம் போட்ட உத்தரவால் வடகொரிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு