எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
நவீன உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் செல்கிறது. அடுத்தடுத்து வெளி வரும் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி வரமாக மாறினாலும், மறுபுறம் பல்வேறு தீமைகளை விளைவித்து சாபமாகவும் அமைந்து விடுகிறது.
உலகம் முழுவதும் நாள்தோறும் பதிவாகும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் மர்ம நபர்கள் பெரும் குற்ற செயலில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர்.
மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் ஒரு லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் பெரும்பாலும் அடுத்தவரின் பணப்பையை குறி வைத்து நடக்கும் நிதி மோசடிகளே பரவலாக நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்த குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.
விசாரணை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த சைபர் கிரைம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
குறிப்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மையம் (14சி) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை கையாளுவதற்கு என பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் லட்சக்கணக்கான கணக்குகளை இந்த மோசடிதாரர்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.
இந்த வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் மற்றொருவரின் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த கணக்குகளில் இருந்து காசோலை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை மோசடிதாரர்கள் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மேற்படி வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள் அறிக்கையாக வழங்கினர். அத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கும் சமீபத்தில் வழங்கினர்.
அப்போது சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய வங்கிக் கணக்குகளை கையாளுவதில் வங்கித்துறையின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்த கணக்குகளை தொடங்கியதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க அறிவுறுத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகள், கனரா வங்கியில் 7 ஆயிரம், கோடக் மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் 5 ஆயிரம் கணக்குகளும் அடங்கும்.
இவ்வாறு ஆன்லைன் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் சேவை - சந்திரபாபு நாயுடு
29 Aug 2025அமராவதி : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சிமாநாட்டில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
-
கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? - சச்சின் பதில்
29 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன?
-
ஆசிய கோப்பை: இந்திய அணி துபாய்க்கு செல்வது எப்போது?
29 Aug 2025மும்பை : நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறு
-
அமெரிக்க பெண்ணை கோவை இளைஞர் கரம்பிடித்தார்
29 Aug 2025கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் நவ இந்தியா பகுதியைச் சோந்த மோகன் - பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30 வயது).
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பியூஸ் கோயல் விளக்கம்
29 Aug 2025புதுடெல்லி : உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.
-
மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுப்பு
29 Aug 2025வாஷிங்டன் : மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
-
தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக்கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்
29 Aug 2025திருவள்ளூர் : தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக் கோரி காங்கிரஸ் நிர்வாகி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
-
பி.சி.சி.ஐ. இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு
29 Aug 2025டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற
-
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி
29 Aug 2025பாரிஸ் : 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 3-வது சுற்றுக்கு தகுதி
29 Aug 2025நியூயார்க் : கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
-
டயமண்ட் லீக் இறுதிச்சுற்று: நீரஜ் சோப்ரா 2-வது இடம்
29 Aug 2025சூரிச் : டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று நடைபெற்றது.
-
பி.சி.சி.ஐ.-யை விமர்சித்த முன்னாள் வீரர்
29 Aug 2025மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், புஜாரா.
-
எனர்ஜி டிரிங் குடித்த விவகாரம் : முகமது ஷமி விளக்கம்
29 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
-
இறுதிப்போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி
29 Aug 2025செயின்ட் லூயிஸ் : அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-08-2025.
30 Aug 2025 -
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
30 Aug 2025காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
30 Aug 2025சென்னை : ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரதது 500 உயர்ந்துள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் போர்க்கப்பல் மூழ்கியது
30 Aug 2025மாஸ்கோ : உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
-
கொச்சி: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
30 Aug 2025கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
உ.பி.யை விட தமிழக முதல்வர் பின்தங்குகிறார் - நயினார்
30 Aug 2025சென்னை : உ.பியை விட தமிழ முதல்வர் பின் தங்கிகியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
30 Aug 2025பீஜிங், சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
30 Aug 2025திருவள்ளூா் : தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்
-
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
30 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது.
-
கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை தொழிற்கல்வி படிப்பு அறிமுகம்
30 Aug 2025சென்னை : தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.