முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கனமழை: கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      இந்தியா
Rain 2025-06-01

Source: provided

திருவனந்தபுரம் : தொடர் கனமழை காரணமாக கேரள மாநிலம், திருச்சூர் கொடகரை பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், வட மாநில இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டது. எர்ணாகுளம். இடுக்கி, கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கேரள மாநிலம், திருச்சூர் கொடகரை பகுதியில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. உள்ளூர்வாசிகள், போலீசார் மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கி வட மாநில இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். குடியிருப்பாளர்கள் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கட்டிடத்தில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பினர். பலியானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராகுல் (19), ரூபெல் (21) மற்றும் அலீம் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து