முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அதிகாரிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2

Source: provided

புதுடெல்லி : ஏர் இந்தியா விமான விபத்தில் விசாரணை அதிகாரிககு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி கடந்த 12-ந்தேதி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏ.ஐ.-171 என்ற எண் கொண்ட, போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஒன்று புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்தில் சிக்கியது. இதில், விமான பயணி ஒருவரை தவிர மீதமிருந்த 241 பயணிகள் உள்பட 270 பேர் வரை பலியானார்கள்.

இந்த விவகாரம் பற்றி விமான விபத்து புலனாய்வு துறையின் இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகந்தர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, ஆயுதம் ஏந்திய 3 முதல் 4 வீரர்கள் அவருடைய பாதுகாப்புக்கு செல்வார்கள். அவர் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து