முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த 3 பேர் கைது

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      தமிழகம்
Arrested-2025-06-28

ராமேசுவரம், இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த 3 நபர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

கடலோர காவல் படையின் ஹோவர்கிராப்ட் எனப்படும் நீர்-நிலப்படகு ஏ.சி.வி.ஹெச் 197, நேற்று காலை சுமார் 8 மணி அளவில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது நான்காவது தீவுத்திட்டில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருப்பதை கண்டுபிடித்தனர். 

உடனடியாக கடலோர காவல் படை வீரர்கள் ஹோவர்கிராப்ட்டை அவர்களை நோக்கி திருப்பி அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இலங்கையின் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய அவர்கள் முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மண்டபம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டு தமிழ்நாடு போலீசாரிடம் மேல்விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து