முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 ராமேசுவரம் மீனவர்கள் காவல் மீண்டும் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
Fissherman 2024-12-02

ராமேசுவரம்,  ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஈசாக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஜுலை 13ம் தேதி கைது செய்தனர்.

படகுகளிலிருந்த 7 மீனவர்கள் மீது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் நீதிமன்ற காவல் வெள்ளிக்கிழமையோடு (நேற்று) நிறைவடைந்ததை தொடர்ந்து 7 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 7 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ம் தேதி வரை (இரண்டாவது முறையாக) நீட்டித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து