எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான 24 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார்.
இந்திய அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுரஜ் கார்கெர், பின்களம்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், அமித் ரோஹிதாஸ், நீலம் சஞ்சீப் செஸ், ஜூக்ராஜ் சிங், பூவன்னா, நடுகளம்: ராஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ரபிசந்திர சிங் மொய்ராங்தெம், விஷ்ணுகாந்த் சிங், முன்களம்: மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங், ஆதித்யா லாலேஜ், செல்வம் கார்த்தி (தமிழ்நாடு). பெங்களூரு சாய் மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி, வருகிற 8-ந் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது.
தெலங்கானா காவல்துறை பாராட்டு
ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 முதல் விளையாடி வருகிறார். இதுவரை 41 டெஸ்ட்டில் 123 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 100க்கும் அதிகமான விக்கெடுக்களை வெளிநாட்டில் எடுத்து அசத்தியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சிராஜுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தெலங்கானா காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “ டிஎஸ்பி முகமது சிராஜுக்கு வாழ்த்துகள்! இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றி வெற்றிபெற உதவிய அவரது சிறப்பான செயல்பாட்டுக்கு வாழ்த்துகள். தெலங்கானாவின் பெருமை. காவல்துறை, விளையாட்டு உடையில் அவர் ஹீரோ!” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய மல்யுத்த அணியில் ஷெராவத்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வுக்கான போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான அமன் ஷெராவத் கலந்து கொண்டார். இதில் அவர் தன்னை எதிர்த்த சுமித், ராகுல் உள்ளிட்டோரை எளிதில் வீழ்த்தி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
இதேபோல் தங்கள் எடைப்பிரிவுகளில் வெற்றி பெற்ற உதித், சன்னி குமார், சுஜீத் கல்கல், அனில், ரோகித், ஜெய்தீப், அமித், முகுல் தாஹியா, தீபக் பூனியா, விக்கி, ரஜத் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
சிறந்த டெஸ்ட்: தர்மசேனா வெளிப்படை
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் கள நடுவர்களில் ஒருவராக இலங்கையின் குமார் தர்மசேனா செயல்பட்டார். இந்நிலையில், அவர் ஓவர் டெஸ்ட் போட்டி குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா - இங்கிலாந்து இடையிலான சிறந்த டெஸ்ட் போட்டியை (ஓவல் டெஸ்ட்) மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனது மிகப்பெரிய அதிர்ஷடம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இறுதியில் கோகோ காப் ஜோடி
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, செர்பியாவின் டேனிலொவிச்- தைவானின் ஹை சூ வெய் ஜோடி உடன் மோதியது.
இதில் கோகோ காப் ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகசியம் பகிர்ந்த சிராஜ்
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டை 6 ரன்களில் வென்று தொடரை 2-2 என சமன்செய்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இவ்வளவு சிறப்பாக விளையாடியது எப்படி என செய்தியாளர் சந்திப்பில் சிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: தொழில்முறை வீரராக இருக்கும் எல்லோருக்கும் நம்பிக்கை என்பது முக்கியம். நம்பிக்கையின்றி எதுவுமே சாத்தியமில்லை. பொதுவாக, நான் காலை 8 மணிக்கு எழுந்திருப்பேன். ஆனால், போட்டியின் கடைசி நாள் காலை 6 மணிக்கே எழுந்துவிட்டேன். கூகுளில் நம்பிக்கை என்ற இந்தப் புகைப்படத்தை தேடி எனது மொபைலில் வால்பேப்பராக வைத்தேன். இன்று எனது நாட்டிற்காக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைத்தேன். எந்த நேரத்திலும் என்னால் போட்டியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். சிராஜ் தீவிரமான ரொனால்டோ ரசிகர். விக்கெட் எடுத்தபிறகு ரொனால்டோ பாணியில் (சுயூ..) கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
அரசு பஸ்சில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பா? தமிழ்நாடு அரசு விளக்கம்
05 Aug 2025சென்னை, பெண் பயணி வீடியோ பதிவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
05 Aug 2025சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா பதில்
05 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.
-
மதுரையில் வரும் 21-ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
05 Aug 2025சென்னை, மதுரையில் வரும் 21-ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
05 Aug 2025ஒகேனக்கல், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது.
-
அமெரிக்கா வரிவிதிப்புக்கு ரஷ்யா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, அமெரிக்கா வரிவிதிப்புககு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
-
உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு 17 பேர் பலி; 50 பேரின் கதி என்ன? பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார்
05 Aug 2025டேராடூன், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர்.
-
பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
05 Aug 2025சென்னை, பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சிறையில் ரேவண்ணாவுக்கு ரூ.540 கூலி
05 Aug 2025பெங்களூரு, சிறையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரூ.540 தினக்கூலி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
முதன்முறை காசாவுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது கனடா
05 Aug 2025ஒட்டாவா: காசாவுககு முதன்முறையாக நிவாரண பொருட்களை கனடா வழங்கியது.
-
ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லை கேப்டனாக்க இதுவே சரியான நேரம் சுனில் கவாஸ்கர் யோசனை
05 Aug 2025லண்டன்: ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்: மோடி சாடல்
05 Aug 2025புதுடில்லி, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என தேசிய ஜனநாயக கூட்டணி பார்லி., குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை கடுமையாக சாடினார்.
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை என அமெரிக்காவுக்க இந்தியா பதிலளித்துள்ளது.
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.12-ல் கோவை பயணம்
05 Aug 2025சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி கோவை செல்கிறார். கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.
-
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மறைவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
05 Aug 2025சென்னை: முன்னாள் ஆளுநர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க., அ.தி.மு.க. மீது சீமான் கடும் விமர்சனம்
05 Aug 2025சென்னை, தி.மு.க., அ.தி.மு.க.வை பேய், பிசாசு என குறிப்பிட்டு சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையம் விளக்கம்
05 Aug 2025புதுடெல்லி, பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த கருத்தும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சபரிமலை: தரிசன முன்பதிவுகள் தீவிரம்
05 Aug 2025சபரிமலை: சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கியது.
-
இந்தியா மீதான ட்ரம்ப் குற்றச்சாட்டு: சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு மறுப்பு
05 Aug 2025அமெரிக்கா, இந்தியா மீதான ட்ரம்பின் குற்றச்சாட்டு தவறானது சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.
-
பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல்
05 Aug 2025பிரேசிலா: பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல் வழங்கியுள்ளது.
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
05 Aug 202512-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
-
செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
05 Aug 2025புதுடில்லி, டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்த, வங்க தேசத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ரூ.75 ஆயிரத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை..!
05 Aug 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 5) பவுன் ஒன்றுக்கு ரூ.600 என அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனையானது.
-
கிளாம்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம், கொளத்தூரில் பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட ரூ.28 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Aug 2025சென்னை, கிளாம்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம், கொளத்தூரில் பள்ளிக்கட்டிடம் உள்ளிட்ட ரூ.28 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது
05 Aug 2025வாஷிங்டன், அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட் செய்துதான் விசா பெற முடியும் என அறிவிப்பு வெளியாகிறது.