எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில் கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை கருத்தை பெறும் வகையில் ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பான மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துருக்கர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு நேற்றுமுன்தினம் முதல் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று 3-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதா அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், தேசத்திற்கு எதிராக இருந்தாலும் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு. இருக்கக்கூடிய சிஸ்டத்திற்கு உள்ளாக நடைமுறைகளுக்கு உள்ளாக எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதே முக்கியமான விஷயம். கவர்னர் விவகாரத்திலும் ஏற்கனவே இருக்கக்கூடிய நடைமுறைக்கு உள்ளாகவே தீர்வு காணப்பட வேண்டும்.
அந்த வகையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் என்பது செய்திருக்கக் கூடாது. ஏனெனில் நமது ஜனநாயகத்தில் அதிகார விவகாரங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த நிலையே தொடர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய விவகாரத்தில் கால நிர்ணயம் வேண்டாம். அரசியலமைப்பு பிரிவு 200ன் கீழ் எந்த ஒரு கால நிர்ணயமும் செய்யப்படவில்லை. என்றுள்ளது. மேலும் நீதிமன்றமானது விவகாரத்தில் ஒரு கால வரம்பை நிர்ணயிக்கவும் முடியாது” என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:-
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு அரசமைப்பில் இல்லை என்றால் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும். மசோதா எப்படி செயல்வடிவம் பெறாமல் இருக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு முடிவில்லாமல் வைத்திருக்க முடியும்? கவர்னரின் செயல்படாத தன்மைக்கு எதிராக மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்றம் ஆய்வு செய்யாமல் இருக்க முடியுமா? தவறு நடந்திருந்தால் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். அரசியலமைப்பு பணியாளர்கள் சரியான காரணமில்லாமல் செயல்படாமல் இருந்தால் நீதிமன்றங்களுக்கு தலையிட அதிகாரம் இல்லையா? நீதிமன்றங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்று கூறமுடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதா, அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், தேசத்திற்கு எதிராக இருந்தாலும் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த மசோதா நீர்த்துப் போகிறது. சில மசோதாக்களில் ஆட்சேபம் இருந்தால் கவர்னர் அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பார். கவர்னர் என்பவர் வெறும் காட்சிக்காக இருப்பவர் அல்ல. கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி, ஆளுநருடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
ஆளுநர் மாநில அமைச்சர்களுக்கு ஒரு வழிகாட்டியாக நண்பராக இருப்பார். எல்லா விவகாரங்களிலும் ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு. ஆளுநர் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு பல தீர்வுகள் உள்ளன.
குறிப்பாக பிரதமர் அல்லது குடியரசுத் தலைவரை சந்தித்துக் கூட மாநில அரசின் பிரதிநிதிகள் முறையிடலாம். தொலைபேசி உரையாடல் வாயிலாக கூட முடிவு காண முடியும். அரசியல் முயற்சியால் ஆலோசனைகளின் மூலம் தீர்வு காண முடியும். நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு நீதித்துறை ஒன்றே தீர்வு என்று இல்லை என்றார்.
இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் ஒரு அங்கம். ஒரு அரசியலமைப்புச் சட்டப் பணியாளர் சரியான காரணங்கள் இல்லாமல் பணிகளைச் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நாங்கள் சக்தியற்றவர்கள் என்றும் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்றும் கூற வேண்டுமா?
காலக்கெடு இல்லையென்றால் ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். எவ்வளவு காலத்திற்கு மசோதா மீது முடிவெடுக்காமல் இருக்க முடியும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை மதிக்கிறேன், ஆனால் இதுபோன்று ஒரு வரம்பை குடியரசுத் தலைவருக்கு நீதித்துறை வழங்க முடியாது” என்றார். இவ்வாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
21 Aug 2025புதுடெல்லி, ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பிரதமர், மாநில முதல்வர்களின் பதவியை பறிக்கும் மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
21 Aug 2025சென்னை, பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் த
-
ஆக. 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
21 Aug 2025சென்னை, 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
ராகுல் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
21 Aug 2025நவாடா: கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடை: பெற்றோர் அதிர்ச்சி
21 Aug 2025கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில் இருப்பதை புகைப்படத்தில் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு
21 Aug 2025திருப்பதி: ஐதராபாத்-சென்னைக்கு புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு நடத்தப்படுகிறது.
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு