எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம். அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா ? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது. நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பொறுத்த வரைக்கும் அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமையின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது
அதேபோல ஓய்வு பெறக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வு கட்டாயப்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்த வரைக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று ஆக்கப்படுவதனால் பாதிப்படைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் அதேவேளையில், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது ஒய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுகொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதேவேளையில், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்ற அம்சங்களை குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
01 Sep 2025 -
சென்னையில் டீ, காபி விலை உயர்வு அமல்
01 Sep 2025சென்னை : சென்னை மாநகரில் டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வந்தது.
-
அமெரிக்கா அதிக வரி விதிப்பு: உதவித்திட்டம் அறிவிக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
01 Sep 2025சென்னை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு உதவித்திட்டம் அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
குற்றம் புதிது திரைவிமர்சனம்
01 Sep 2025போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார்.
-
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது
01 Sep 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது.
-
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
01 Sep 2025சென்னை : தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாரதத்தாயின் வீர மகன்: பூலித்தேவருக்கு கவர்னர் புகழாரம்
01 Sep 2025சென்னை : பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் கூறியுள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர்: முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தல்
01 Sep 2025பெய்ஜிங் : ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன்கள் குப்பைகள் அகற்றம்
01 Sep 2025சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
-
வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்: தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேற்றம் : ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Sep 2025சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-
திருவள்ளூர் அருகே மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டாஸ்மாக் ஊழியர்கள்
01 Sep 2025சென்னை : காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர்
-
ஜார்க்கண்ட்டில் 2 மாவோயிஸ்டுகள் கைது
01 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
அடுத்த வாரம் வெளியாகும் யோலோ
01 Sep 2025MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.
-
இந்த வாரம் வெளியாகும் காந்தி கண்ணாடி
01 Sep 2025ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் தற்போது இயக்கியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
-
டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்: உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரம்
01 Sep 2025டெல்லி : டெல்லியில் பரவும் பறவை காய்ச்சலால் உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம் அடைந்துள்ளது.
-
பாம் இசை வெளியீட்டு விழா
01 Sep 2025ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர் நடிக்கும் படம் பாம்.
-
மூளையை தின்னும் அமீபா: கேரளாவில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலி
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
-
மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் ரயில் பாதை: பிரதமர் செப்.13-ல் திறந்து வைக்கிறார்
01 Sep 2025ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.
-
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ திடீர் ஆதரவு
01 Sep 2025சென்னை : சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்திறகு துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு
01 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அடித்து நொறுக்கிய இலங்கை அரசு
01 Sep 2025ராமேசுவரம் : பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அடித்து உடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தெற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரம்: போலீஸ் வேன், சிறைத்துறை பேருந்து மோதல்: 16 பேர் பலி
01 Sep 2025விண்ட்ஹொக் : தெற்கு ஆப்பிரிக்காவில் போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்வு கட்டாயம் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
01 Sep 2025புதுடெல்லி : ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
01 Sep 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.