எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்துசெய்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை வழங்கியது. இதை பயன்படுத்தி இந்தியாவும் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
அந்தவகையில் கடந்த 2018-20-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7 சதவீதமாக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2023-24-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரித்தது. அதன் மூலம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இவ்வாறு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியையும் டிரம்ப் நிர்வாகம் விதித்தது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என கூறினார். ஆனால் இதை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மறுத்து உள்ளார். பிரதமர் மோடி, டிரம்பிடம் அப்படி ஒரு போன் உரையாடல் நடத்தியது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் மத்திய அரசு வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்த அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் வரை நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் இறக்குமதி செய்து வந்தது. பின்னர் ஜூலை முதல் செப்டம்பர் வரை நாளொன்றுக்கு 16 லட்சம் பீப்பாயாக குறைந்திருந்தது. இது அக்டோபர் மாதத்தில் மீண்டும் அதிகரித்து இருக்கிறது. அதாவது நாளொன்றுக்கு 18 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக சர்வதேச வர்த்தக பகுப்பாய்வு நிறுவனமான கெப்ளர் தெரிவித்து உள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் எண்ணெய் இறக்குமதி குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்க வரி விதிப்பு குறித்த கவலைகள் மற்றும் பருவகால காரணிகள் இதில் முக்கியமானவை ஆகும். குறிப்பாக பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்களான எம்.ஆர்.பி.எல்., சி.பி.சி.எல், பி.ஓ.ஆர்.எல் போன்றவற்றில் பராமரிப்பு நடவடிக்கைகள் அதிகரித்ததும் இந்த இறக்குமதி சரிவுக்கு காரணமாகும். தற்போது இந்த பணிகள் முடிவடைந்து இருப்பதுடன், பண்டிகை கால தேவைகளும் அதிகரித்து இருப்பதால் மீண்டும் இந்த இறக்குமதி அதிகரித்து இருப்பதாக கெப்ளர் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.