முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் 2-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ்

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      விளையாட்டு
Kammins 2024-05-25

Source: provided

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த நிலையில்,  காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபா மைதானத்தின் தன்மையை பொறுத்தே கம்மின்ஸ் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கமால் இருந்து வருகிறது.

_____________________________________________________________________________________________________________

தொடர்ந்து 20-வது முறையாக தோல்வி

ராஞ்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. தொடரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நேற்று (டிச.3) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர் நாராயணன் சிங் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் முகத்தில் விரக்தியைக் காண முடிந்தது. இந்தப் போட்டியில் டாஸ்ஸில் தோற்றதன் மூலம், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 20 வது முறையாக டாஸ்ஸை தோற்றுள்ளது. டாஸ்ஸில் தோற்றது குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரவி சாஸ்திரியிடம் இந்திய கேப்டன் கே.எல். ராகுல் பேசுகையில், “இன்றைய (நேற்று) போட்டியில் மிகப் பெரிய அழுத்தம் டாஸ் என்றுதான் நினைக்கிறேன். நீண்ட காலமாகவே நாங்கள் டாஸ்ஸை வெல்லவில்லை. அதனால்தான், நாணயத்தை சுண்டி பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், அது இன்னும் பலனளிக்கவில்லை” என்றார்.

_____________________________________________________________________________________________________________

இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ்

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஒரே மாற்றமாக, காயமடைந்த மார்க் வுட்டுக்கு பதிலாக ஸ்பின் ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வில் ஜாக்ஸ், அதன் பிறகு வெள்ளைப் பந்து தொடர்களிலேயே விளையாடி வந்தார்.

இந்நிலையில், பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட்டில் அவர் களம் காண்கிறார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜோஷ் டங், மேத்யூ பாட்ஸ் போன்ற பேஸர்கள் தயார்நிலையில் இருக்கும்போதும், சுழற்பந்துவீச்சாளர் வில் ஜாக்ஸ் இங்கிலாந்து இணைத்துக்கொண்டுள்ளது. சுழற்பந்து வீச்சில் கடந்த இரு ஆண்டுகளாக ஷோயப் பஷீர் இங்கிலாந்து அணியின் பிரதான தேர்வாக இருந்த நிலையில், இந்த ஆஷஸ் தொடரில் அவர் தயார்நிலை வீரராக இருந்தும், அவருக்குப் பதிலாக ஜாக்ஸ் பிளேயிங் லெவனில் தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________

இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. லீக் முடிவடைந்த நிலையில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது. அதே சமயம் சுவிட்சர்லாந்து 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெளியேறியது.

இதே போல 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி (ஏ பிரிவு), 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகிய அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முன்னேறின. 2-வது இடத்தை பிடித்த சிறந்த 2 அணிகளான நியூசிலாந்து (சி பிரிவு), பெல்ஜியம் (டி) ஆகியவையும் தகுதி பெற்றன.இன்று ரேங்கிங் ஆட்டங்கள் நடக்கிறது. கால்இறுதி போட்டிகள் நாளை ( வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

_____________________________________________________________________________________________________________

ஜேக்கப் டஃபி மிரட்டல் பந்துவீச்சு

நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்டஇண்டீஸ் அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து சாய் ஹோப் மற்றும் சந்தர்பால் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. 56 ரன்கள் எடுத்த நிலையில் சாய் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதனை தொடர்ந்து சந்தர்பால் 52 ரன்னிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

_____________________________________________________________________________________________________________

ஹர்ஷித் ராணா மீது நடவடிக்கை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்தினார். அப்போது வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டினார். இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து