முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷமி குறித்து ஹர்பஜன் கேள்வி

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      விளையாட்டு
Harbhajan-Singh 2023-10-21

Source: provided

முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கை ஆற்றினார். ஆனால் அதன்பின் அவர் பிட்டாக இல்லை என்று சொல்லி இந்திய தேர்வுக்குழு கழற்றிவிட்டு வருகிறது. இருப்பினும் அவர் உள்ளூர் தொடர்களில் ஆடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதனை சுட்டிக்காட்டியே ஹர்பஜன் சிங் தற்போது விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிகிறது, உங்களிடம் பிரசித் இருக்கிறார். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்தான். ஆனால் அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உங்களிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இருந்தனர். நீங்கள் மெதுவாக அவர்களை ஓரங்கட்டிவிட்டீர்கள். நமது பவுலிங் பும்ரா இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் கலையை நாம் கற்க வேண்டும். இங்கிலாந்தில் அவர் இல்லாமலேயே சிராஜின் நம்ப முடியாத ஆட்டத்தால் நாம் டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அது போன்ற கலவையைக் நீங்கள் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

________________________________________________________________________________________________________________________________________

வரலாறு படைத்த லபுஷேன்

பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் புதிய வரலாறு படைத்துள்ளார். இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் இந்த சாதனையை லபுஷேன் முதல் வீரராக நிகழ்த்தியுள்ளார். இரவு பகலாக ஆடப்படும் டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிற பந்து பயன்படுத்துவதால் அதனை பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என அழைக்கிறார்கள். இந்த வகைமையில் முதல்முறையாக 1000-க்கும் அதிகமான ரன்களை குவித்த வீராரக மார்னஸ் லபுஷேன் வரலாறு படைத்துள்ளார்.

60 டெஸ்ட் போட்டிகளில் 4,560 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1,00க்கும் அதிகமாக இரவு - பகல் டெஸ்ட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 25-ஆவது டெஸ்ட் அரைசதத்தை நிறைவுசெய்த லபுஷேன் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பிங்க் பந்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வீரர்கள் வருமாறு., 1023 - மார்னஸ் லபுஷேன் (16 இன்னிங்ஸ்), 827* - ஸ்டீவ் ஸ்மித் (25 இன்னிங்ஸ்), 753 - டேவிட் வார்னர் (17 இன்னிங்ஸ்), 752 - டிராவிஸ் ஹெட் (16 இன்னிங்ஸ்).

________________________________________________________________________________________________________________________________________

கோலி ரசிகரின் தகவலால் அதிர்ச்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

இந்நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

________________________________________________________________________________________________________________________________________

விராட் கோலி குறித்து அஸ்வின் 

தன்னுடைய திறமை குறித்து சந்தேகப்படுவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி இப்படி கொண்டாடுவதாக இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “விராட் ஏன் அப்படி கொண்டாடுகிறார்? அவர் என்ன நினைக்கிறார், என்ன அனுபவித்தார்? விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஒத்திசைவாக உணர்ந்தன. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். எப்போதும் டெஸ்டில் விளையாட விரும்பினார். ஆனால் அவர் அதிலிருந்து ஓய்வு பெற்றார். ஏனெனில் அவரைச் சுற்றி உரையாடல்களும், டெஸ்ட் போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்காதது குறித்த கேள்விகளும் இருந்தன. 

எவ்வாறாயினும் ஓய்வு பெறுவது ஒரு முக்கிய முடிவு. தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.  மக்கள் தனது திறமையை சந்தேகிக்கிறார்களா? என்று விராட் கோலி சிந்தித்து கொண்டிருப்பார். தனது திறமை என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் வலுக்கட்டாயமாக உங்களை நிரூபிக்க முயற்சிக்கும் போது அது நடக்காமல் போகலாம். ஒருவேளை கடந்த காலத்தில் விராட்டுக்கு அது நடந்திருக்கலாம். ஆனால் தற்போது என்னையா சந்தேகத்தீர்கள்? என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறேன் என்ற வகையில் விளையாடுகிறார். அவர் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறார்” என்று கூறினார். 

________________________________________________________________________________________________________________________________________

சுனில் நரைன் '600' விக்கெட்

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசன் நடக்கிறது. ஷார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி (233/4), 39 ரன் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை (194/9) வீழ்த்தியது. இப்போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய அபுதாபி அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் 37, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 600 விக்கெட் சாய்த்த 3வது பவுலரானார். 

கோல்கட்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், கயானா, சிட்னி சிக்சர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கான விளையாடிய இவர், 568 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (681 விக்கெட், 499 போட்டி), வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (631 விக்கெட், 582 போட்டி) இந்த இலக்கை கடந்தனர்.

________________________________________________________________________________________________________________________________________

வைரலாகும் ஹைடன் மகளின் பதிவு

ஜோ ரூட் சதத்தினால் முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடனின் நிர்வாண ஊர்வலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஹைடனின் மகளும் கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல் ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்காமல் இருந்தார். இந்தத் தொடருக்கு முன்பாக முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடன் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் தான் நிர்வாணமாக மெல்போர்ன் கிரிக்கெட் திடலைச் சுற்றிவருவதாகக் கூறினார்.

தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் அடித்து ஹைடனின் நிர்வாண ஊர்வலத்தை காப்பாற்றி விட்டார். இது குறித்து வர்ணனையாளராக இருக்கும் ஹைடனின் மகளான கிரேஸ் ஹைடன் பேசியவை கவனம் ஈர்த்து வருகின்றன. போட்டியின்போது கிரேஸ் ஹைடன், ”தயவுசெய்து சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்” எனக் கூறினார். சதம் அடித்ததும், “மிக்க நன்றி ஜோ ரூட். நீங்கள் எங்களது கண்களைக் காப்பாற்றிவிட்டீர்கள்” எனக் கூறினார். மேலும் தனது இன்ஸ்டா பதிவிலும் இது குறித்து பதிவிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து