முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
CM-W-1 2025-12-06

Source: provided

சென்னை : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு அவர் சால்வை அணித்து கவுரவித்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார்க்குழலி அம்மன் கோவிலுக்கு ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தேருக்கு நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

இதில் முதல்வரின் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் கஜ, அஸ்வ, உஷ்ர பூஜைகளில் கலந்து கொண்டார். தங்கத்தேரினை சுற்றிப் பார்த்து அதன் கலைநயத்தை பாராட்டிய அவர், தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து