எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை:-
அவைத் தலைவருக்கு வணக்கம். எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.
எஸ்.ஐ.ஆர். தேர்தல் காலம் அல்லாத பிறகாலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. வழக்கமாக வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை சுருக்க திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்கிற பெயரில் அவ்வப்போது நடந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது வாக்காளர்களின் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி வரக்கூடியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சித் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் பீகாரில் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற 47 லட்சம் பேரில் யாராவது ஒருவர் அண்டைய நாட்டைச் சார்ந்தவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேரும் இந்திய குடிமக்கள். பீகாரை சார்ந்த மண்ணின் மைந்தர்கள். ஆக இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் குடியுரிமையையும் பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசுகிறபோது எதிர்காலத்தில் இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கிற நிலை உருவாகும் என்கின்ற அச்சத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார். அந்தக் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை இந்தச் சூழலில் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். அம்பேத்கர் முன்வைத்த அந்தக் கோரிக்கையை நான் மீண்டும் இந்த அவையில் வழிமொழிய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
தேர்தல் ஜனநாயகம் நமது தேசத்தின் உயிர் மூச்சு கொள்கையாகும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் அதனை வெற்றிகரமாக இயங்கச் செய்வதிலும் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கியமான அரசு நிறுவனங்கள் அரசியல் தலையீடு உள்ள சிக்கலாக மாறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல் புலனாய்வு நிறுவனங்கள் நீதித்துறைகள் இவை அனைத்திலும் இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடே இன்றைக்கு உணர்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
தேர்தல் ஆணையத்திற்கு குடியுரிமையை பரிசோதிக்கிற எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்காத போது சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எப்படி அது துணிந்தது? 13 ஆவணங்களை கூறுகிறது. இந்த 13 ஆவணங்களும் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஆவணங்கள். எனவே எஸ்.ஐ.ஆர். என்கிற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிற வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இது எந்த வகையிலும் ஏற்க முடியாது. அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நடக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒருபோதும் இடம்பெறாது. இலங்கைத் தமிழர்கள் அங்கே வருகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் சட்ட விரோதமாக குடியேறவில்லை. அரசின் அனுமதி பெற்று தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாத சூழல் உள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த கோரிக்கையை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியாக இதை மேற்கொள்ளக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்து இந்த ஈ.வி.எம். முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
12 Dec 2025மதுரை, ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது என்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 Dec 2025சென்னை, ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 12-12-2025
12 Dec 2025 -
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
சவுதி அரேபியாவில் இனி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை
12 Dec 2025துபாய், முதல்முறையாக சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11,718 கோடி மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
12 Dec 2025புது டெல்லி, வரும் 2027 மார்ச் 1-ல் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
12 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொ
-
மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
12 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் லேசான மழை பெய்ய வாய்ப்பு
12 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் 3-ம் உலக போருக்கு கொண்டு போய் விடும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
12 Dec 2025வாஷிங்டன், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் போர் தொடர்ந்தால் இந்த விவகாரம் 3-ம் உலக போருக
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கியது
12 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
ட்ரம்ப் வலது கையில் காயம்...? வெள்ளை மாளிகை விளக்கம்
12 Dec 2025வாஷிங்டன், ட்ரம்ப் வலது கையில் காயம் குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளித்துள்ளார்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு டிச. 15-ல் பிரதமர் மோடி பயணம்
12 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பல தலைமுறைகளை கவர்ந்தவர்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து
12 Dec 2025புதுடெல்லி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வருவது எப்பொழுது..? இஸ்ரோ தலைவர் தகவல்
12 Dec 2025நெல்லை, 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் வருகிறார் அமித்ஷா
12 Dec 2025சென்னை, வரும் 15-ம் தேதி (நாளை மறுநாள்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க.
-
ரத்தாகும் விமானங்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தும் ஏர் இந்தியா
12 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் கட்டணத்தை திருப்பி செலுத்தியது ஏர் இந்தியா நிறுவனம்.
-
வணிக ரீதியிலான அமெரிக்க செயற்கைக்கோள் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்
12 Dec 2025திருப்பதி, வரும் 15-ம் தேதி அமெரிக்க செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திரா: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி: பிரதமர் இரங்கல் -நிதியுதவி அறிவிப்பு
12 Dec 2025ஐதராபாத், ஆந்திரத்தில் கோவிலுக்குச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்
12 Dec 2025சென்னை, நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள்.
-
சட்டசபை கூட்டத்தொடர் முடித்துவைப்பு
12 Dec 2025சென்னை, கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளா


