எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடப்பாண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்றன. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. எனினும், எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து தேர்தலும் முடிந்து, பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
இதேபோன்று, நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பு அறிவித்தது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.
இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்த பணியை செய்து முடிப்பது என்பது இயலாதது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த சூழலில், கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
இதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க டிசம்பர் 11 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு தமிழகம், கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதன்பின்னர், டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான காலஅவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க டிசம்பர் 14-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதன்பின்னர் வருகிற 19-ம் தேதி தமிழகம், குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 18-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். உத்தர பிரதேசத்தில் 26-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு 31-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ரத்தாகும் விமானங்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தும் ஏர் இந்தியா
12 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் கட்டணத்தை திருப்பி செலுத்தியது ஏர் இந்தியா நிறுவனம்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: டிக்கெட் விற்பனை துவக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம்
12 Dec 2025துபாய், டி-20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
12 Dec 2025ஈரோடு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
வாரராசிபலன்
13 Dec 2025


