எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார். அவருடன் பேசுவதற்கு காலஅவகாசம் உள்ளது' என, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து தரிசனம் செய்ய வந்த அவர் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நல்ல நடிகர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ராஜ்யசபாவில் அவரது கன்னிப்பேச்சில் எல்லோருக்கும் வருத்தம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் இப்படி தமிழ் மொழியை நாகரீகமாக பேசவில்லை' என்றதை கமல் தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்.
இது குறித்து அவரின் கவனத்திற்கு சென்றுள்ளதாக அறிகிறோம். மக்களவையில் அடுத்தமுறை பேச வாய்ப்பு கிடைக்கும் போது திருத்தத்தை பதிவு செய்வார் என்று நம்புகிறோம். அவர் ராஜ்யசபா உறுப்பினராக தமிழகத்திற்கு உழைக்க நினைக்கிறார். அந்த பொறுப்பு நல்லபடியாக நடக்கட்டும். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மட்டுமில்லை; புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு முதலில் ஆக்கம், ஊக்கம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் நாகரீகம் என்பதற்கு லட்சுமண ரேகை உள்ளது.
அதை விஜய் கடக்கக் கூடாது என்று சொன்னேன். மற்றபடி அது அவர் கட்சி. அவர்கள் கொள்கை இருந்தால் மக்கள் முன் நிற்கட்டும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கொள்கையை முன் வைப்போம். மக்கள் முடிவு செய்யட்டும். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தனித்து விடப்படவில்லை. அவர் எங்களோடு தான் இருக்கிறார். இன்னமும் பேச நாட்கள் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்கள் முழுமையாக உள்ளன. எங்கே போகப் போகிறார்.
புள்ளி விபரத்தைப் பாருங்கள். தென்னிந்தியாவில் கடைசியில் இருக்கிறோம். கல்வி கற்கும் தரத்தை பாருங்கள். தமிழகம் கடைசியில் உள்ளது. சி.பி.எஸ்.சி.,ல் ஆண்டுதோறும் தரும் அறிக்கையைப் பாருங்கள். தமிழகம் அதலபாதாளத்தில் உள்ளது. பள்ளிக்கூடத்தில் கஞ்சா விற்கும் நிலையை தி.மு.க., ஆட்சி கொண்டு வந்துள்ளது. என்னைப் பார்த்தால் கட்சியை விட்டு விலகியது போலவா தெரிகிறது. நிர்வாகிகளின் அன்பான வரவேற்பில் உள்ள போது பா.ஜ.வை விட்டு போவதாக கூறலாமா.ஹிந்தி மொழியால் காங்., தமிழகத்தை விட்டு சென்றது போல பா.ஜ.,வும் தமிழகத்தை விட்டு வெளியேறும் என்று சொல்லும் தி.மு.க., எம்.பி., கனிமொழி நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவர் அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுகிறார். காலையில் ஒன்று மதியம் ஒன்று பேசுகிறார். ஆட்சிக்கு வரும் முன் டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறார். வந்த பின் திறந்து வைத்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி 2014, 2019, 2024 தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் நம் நாட்டின் நதிகள் இணைக்கப்பட வேண்டும்; இதில் தமிழகம் முக்கியத்துவம் பெறும். காரணம் தமிழகம் நதி நீர்ப் பற்றாக்குறையில் உள்ள மாநிலம். நிச்சயமாக இது நடக்கும். இப்போது உள்நாட்டு நீர்வழி மின்சாரம் எடுக்கிறார்கள். அடுத்து நதிகளை சீரமைக்கிறார்கள். பின் நதிகள் இணைக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டது: துணை முதல்வர்
07 Feb 2026விருதுநகர், பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
08 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –08-02-2026
08 Feb 2026 -
எப்ஸ்டீனை சந்தித்தேனா? தலாய் லாமா விளக்கம்
08 Feb 2026லகாசா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.&nbs
-
வருகிற 13-ம் தேதி சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
08 Feb 2026சேலம், சேலத்தில் வரும் 13-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்
-
ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச மூன்ற மாத அவகாசம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
08 Feb 2026சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார்.
-
விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்
08 Feb 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க.
-
பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியம்: மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
08 Feb 2026கோலாலம்பூர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Feb 2026சென்னை, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
தேர்தலில் தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கட்சி பயணிக்கும்: மதுரையில் செல்வப்பெருந்தகை பேட்டி
08 Feb 2026மதுரை, காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம்: திருமா திட்டவட்டம்
08 Feb 2026சென்னை, இந்த முறை சட்டசபை தேர்தலில் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
-
மலேசியாவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் பாடல்
08 Feb 2026கோலாலம்பூர், மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்.ஜி.ஆரின் ’நாளை நமதே’ பாடல் பா
-
அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான்: செங்கோட்டையன் பேட்டி
08 Feb 2026ஈரோடு, தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்
08 Feb 2026புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது வ
-
குரூப்-2, 2ஏ தேர்வுகள் திடீர் ரத்து: தேர்வர்கள் மறியலால் பரபரப்பு
08 Feb 2026சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


