எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர், ஜூன்.- 9 - காவேரிப்பாக்கம் அருகே தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து எரிந்து விபத்துக்கு உள்ளாகியதில் பஸ்சில் பயணம் செய்த 22 பேர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர். இதில் 11 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டன. வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் உடல்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் கதறி அழுதபடி சோகத்தில் மூழ்கி உள்ளனர். நெஞ்சை உலுக்கும் இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு- சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தனியார் சொகுசு பஸ் ஒன்று, பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த டிரைவர் நாகராஜன் பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் 6 பெண்கள் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் பஸ் வேகமாக வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்பு இரண்டு லாரிகள் போட்டி போட்டு சென்றன. முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி திடீரென்று மோதியது. அதனால் 2 லாரிகளும் உரசிக்கொண்டு தடுமாறியபடி ரோட்டில் நின்றன. லாரிகளுக்கு பின்னால் வந்த தனியார் பஸ்சை, லாரிகள் மீது மோதாமல் இருக்க, அதன் டிரைவர் இடதுபுறம் திருப்பி உள்ளார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பாலத்தின் மீது மோதியது. இதனால் முன் சக்கரம் இரண்டும் உடைந்தது. பஸ் நிலை தடுமாறி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதே நேரத்தில் டீசல் டேங்க்கும் வெடித்து சிதறி தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியதில் பஸ் முழுவதும் பனைஓலை எரிவது போல் சடசடவென எரிந்து உருக்குலைந்தது. பஸ்சில் பயணம் செய்தவர்களில் பயணிகள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது? என்று யூகிக்க முடியவில்லை. என்ன செய்வது என தெரியாமல் பஸ்சுக்குள் பயணிகள் அங்குமிங்கும் ஓடினர். பஸ் ஏ.சி. வசதி கொண்டதால், கண்ணாடிகள் மூடியபடி இருந்தது. அதை அந்த அவசர நேரத்தில் திறக்க முடியாமல் பயணிகள் பலர் தீக்கிரையாயினர். பஸ் டிரைவர் நாகராஜன் கதவை உடைத்துக் கொண்டு பயணிகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் கதவை திறக்க அவர்களால் முடியவில்லை. பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்ததால் பின்னால் அமர்ந்திருந்த சென்னை முகப்பேறை சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற பயணி வெளியேவந்து விழுந்து விட்டார். அதனால் அவரும் லேசான காயத்துடன் தப்பிவிட்டார். அந்த வழியாக சென்ற வாகனங்களில் பயணம் செய்தவர்கள், இந்த கோர விபத்தினை பார்த்து துடித்துப்போனார்கள். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ 50 அடி உயரத்துக்கு எரிந்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் 22 பயணிகளும் தீயில் கருகி பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்களால், தீயை அணைக்கத் தான் முடிந்ததே ஒழிய தீயில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போனது. அதற்குள் தீ, பஸ்சில் இருந்த பயணிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டையை போல் எரித்து சாம்பலாக்கி விட்டது. விபத்து நடந்த இடத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜன், வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயராம், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட், வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் பார்த்திபன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டு உள்ளன. இதுவரை, விபத்தில் பலியான 22 பேரில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் (29), பொள்ளாச்சியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வெங்கடேசன் (32), சென்னை முகப்பேரை சேர்ந்த சுனிதா (32), சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் (58), மதுரையைச் சேர்ந்த மாசானகார்த்திக் (29), ஒரிசாவைச் சேர்ந்த பரத் (26), உடுமலையைச் சேர்ந்த ஜெயராணி (25), பொள்ளாச்சி ஆவாளம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (49), மதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தினரான விஜயலட்சுமி (58), இவரது மகன் விமல் (36), பேரன் பிரணவ்ராஜ் (11) உள்பட 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
தமிழகம் முழுவதும் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்..!
28 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
-
கவுதம் காம்பீரை நீக்கிவிட்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்கிறது பி.சி.சி.ஐ.?
28 Dec 2025மும்பை, இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வி.வி.எஸ். லக்ஷ்மணை கொண்டு வர பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
28 Dec 2025சென்னை, சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
-
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி நாளை திறந்து வைக்கிறார்
28 Dec 2025கோவை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (30-ம் தேதி) திறந்து வைக்கிறார்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம்
28 Dec 2025தென்காசி, தொடர் விடுமுறை காரணமாக நேற்று குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025



