எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உலக அரங்கில் நாம் பால் உற்பத்தியில் முதல் இடம் வகித்தாலும், கால்நடைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த உற்பத்தியானது மிகவும் குறைவேயாகும். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பசுந்தீவனப் பற்றாகுறை ஆகும். ஒரு பசுவின் வளமான வளர்ச்சிக்கு ஒருநாளைக்கு குறைந்தது 20 கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஆனால் இக்காலகட்டத்தில் நிலப்பற்றாகுறை மற்றும் பருவமழை பொய்ப்பு காரணமாக பசுந்தீவன உற்பத்தி ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. ஆகவே, பருவமழைக்காலங்களில் கிடைக்கும் கூடுதலான தீவனத்தை விரயப்படுத்தாமல் சேமித்து, தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பயன்படுத்துவதற்கு சிக்கனமான சிறந்த சேமித்து வைக்கும் முறைகளை அறிதல் அவசியம்.
பசுந்தீவனப் பயிர்களைசேமிப்பதற்கான தொழில் நுட்பங்கள் - பசுந்தீவனத்தை இரு வகைகளில் சேமித்துவைக்கலாம்.
1. பசுந்தீவனத்தை அதன் பசுமைமாறாமல் பதப்படுத்திகுழிகளில் சேமித்துவைக்கும் ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை
2. பசுந்தீவனத்தை அதன் சத்துக்கள் குறையாத வண்ணம் சரியான தருணத்தில் அறுவடை செய்து நிழலில் உலர்த்தி உலர் தீவனமாக்கி படப்புபோர் அமைத்து சேமித்தல்
அ. ஊறுகாய்ப்புல் தீவனம் (சைலேஜ்) தயாரித்தல்
பருவமழைக்காலங்களில் கிடைக்கும் கூடுதலான தீவனத்தை விரயப்படுத்தாமல் சேமித்து, தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பயன்படுத்துவதற்கு ஒரு சிக்கனமான சிறந்த வழி ஊறுகாய்ப்புல் தயாரிப்பதாகும். குறைந்த செலவில் குழிகள் எடுத்து, பசுந்தீவனத்தை பதப்படுத்தி சேமித்து ஊறுகாய்ப்புல் தயாரித்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
ஊறுகாய்ப்புல் தீவனம் (சைலேஜ்) தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
•தீவனப்பயிர்களின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மாறுவதில்லை. கால்நடைகளும் உறுகாய்ப்புல்லை; விரும்பி உண்ணும். எனவே பசும்புல் கிடைக்காத காலங்களில் ஊறுகாய் ;புல்லை மாடுகளுக்கு அளிக்கலாம்.
•கடினமான தண்டு மற்றும் முற்றிய புல்லைக்கூட ஊறுகாய்ப்புல்லாய் மாற்றுவதன் மூலம் அவை மென்மைப்படுத்தப்பட்டு கால்நடைகள் விரும்பி உண்ண ஏதுவாகும்.
•தீவனப்புல்லுடன் உள்ளகளைகள், விதைகள் இதன் மூலம் அழிக்கப்படுகிறது.
•ஊறுகாய்ப்புல்லை 9-12 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.
ஊறுகாய்ப்புல் தயாரிக்கஉகந்ததீவனப்பயிர்கள்
1.தீவனச்சோளம்
2.தீவனமக்காச்சோளம்
3.கம்புநேப்பியர் ஒட்டுப்புல்
நம் நாட்டில் அதிகஅளவில் பயிரிடப்படுவதால் சோளப்பயிர் கொண்டு ஊறுகாய்ப்புல் தயாரிப்பது பற்றி அறிவது நன்மை பயக்கும். ஊறுகாய் புல் உற்பத்திக்கு தீவனச்சோளம் எம்.பி.சாரி, தீவனச்சோளம் கோ-27, தீவனச்சோளம்கோ. எப்.எஸ்-29 போன்ற தீவனச்சோள இரகங்கள் ஏற்றவை.
ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் வழிமுறைகள்
1.தேர்ந்தெடுக்கப்பட்ட தீவனச்சோள இரகங்களை மானாவாரியாக, வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பயிரிடவேண்டும்.
2.தீவனச்சோளத்தின் கதிர்கள் பால்பருவத்தில் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.
3.அறுவடை செய்த தீவனச்சோளத்தை வயலிலேயே 1-2 மணி நேரம் உலரவிட வேண்டும்.
4.உலரவிடப்பட்ட தீவனத்தை சிறுசிறு கட்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 35 முதல் 40 சதவீதம் உலர் எடை இருத்தல் அவசியம்.
5.இந்த சிறுகட்டுகளை ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழிகளில் அடுக்கடுக்காக நிரப்ப வேண்டும்.
6.அடுக்கடுக்காக நிரப்பும் போது அடுக்குகளை நன்குமிதித்துவிடுவதன் மூலம் இடையிலுள்ள காற்றை வெளியேற்றுவது மிகவும் அவசியம்.
7.ஒருடன் தீவனப்பயிருக்கு 20 கிலோ மொலாசஸ், 8 கிலோ சாதாரண உப்பு தூவ வேண்டும். மொலாசஸ் கிடைக்கப் பெறாத விவசாயிகள் வெல்லப்பாகினைடன் ஒன்றுக்கு 20 கிலோ என்று பயன்படுத்தலாம்.
8.சைலேஜ் குழிகள் நிரம்பியவுடன் தரைமட்டத்திற்கு மேல் 1-2 அடிவரையில் தீவனச்சோளத்தை அடுக்கி அதன் மேல்புறத்தை தீவனச்சோளம் கொண்டே கூம்புவடிவில் அமைக்க வேண்டும்.
9.குழிகளில் கூம்பு அமைத்து, அதன் மேல் பாலிதின் தாள் அல்லது புல் கொண்டு மூடி அதன் மேல் மண் கொட்டி காற்றுப்புகாமல் அடைக்க வேண்டும்.
10.பொதுவாக ஊறுகாய்ப்புல்லை மழைக்காலங்களில் தயாரிக்கும் சூழல் இருப்பதால், மழைநீர் உட்புகாதவாறு மேலும் மண் கொட்டி விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
11.பதப்படுத்தப்பட்டஊறுகாய்ப்புல், மூன்று மாதங்களுக்கு பிறகு கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும்.
இவ்வாறு பதப்படத்தப்பட்ட ஊறுகாய்ப்புல்லை கறவைமாடுகளுக்கும், செம்மறியாடுகளுக்கும், வெள்ளாடுகளுக்கும் கோடையில் உணவாக கொடுக்கலாம். இதனால்; கோடையில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையை பூர்த்திசெய்யலாம். கறவைமாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 - 25 கிலோ என்ற அளவில் அளிக்கலாம்.
தயாரிப்பிலுள்ள இடர்பாடுகள் அல்லது கருத்தில் கொள்ள வேண்டுபவை
•தகுந்தமுறையில் பதப்படுத்தப்படாவிட்டால், தீவனப்பயிர்கள் கெட்டுப்போகவும், சத்துக்கள் வீணாகவும் வழி ஏற்படும்.
•ஒரு முறை சைலேஜ் குழியை திறந்து ஊறுகாய்ப்புல்லை எடுக்க ஆரம்பித்துவிட்டால், தொடர்ந்து அவை எடுக்கப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படவேண்டும.;
•ஊறுகாய்ப்புல் நல்ல நறுமணத்துடன் - பழ வாசனையுடன் இருக்க வேண்டும்.
•அமிலத் தன்மை 4.2 முதல் 4.8 வரை இருக்க வேண்டும்.
•அமோனியாஅளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்கானகுழிகள் அமைத்தல்
ஊறுகாய்ப்புல் தயாரிக்க தரைமட்டக்குழிகள் அமைத்து பதப்படுத்தும் முறை சிறந்தாகும். நீளம் 15 அடி, அகலம் 12 அடி, ஆழம் 6 அடி என்ற அளவுள்ள தரைமட்டக்குழிகளில் 50டன் வரை பசுந்தீவனத்தை பதப்படுத்த இயலும். அந்த வகையில் ஒரு டன் பசுந்தீவனத்தை ஊறுகாய் புல்லாகபதப்படுத்த 28-30 கனஅடி இடம் தேவைப்படும். மழைகாலங்களில் குழிகளில் நீர் கசிவைத்தடுக்க, பண்ணையின் மேட்டுப்பாங்கான இடத்தில் குழிகள் அமைக்கப்படவேண்டும். குழிகளின் உட்புறசுவர்கள் சிமெண்ட் கொண்டு பூசப்படுவதன் மூலம் உட்புறநீர்கசிவைத்தடுக்கலாம். குழிகளின் ஆழம் 6 அடிக்குமிகாமல் இருப்பதன் மூலம் இலகுவாக தீவனத்தை குழிகளில் இறக்கி அடுக்க ஏதுவாக இருக்கும்.
ஆ. படப்புபோர் அமைத்தல் :
தீவனப்பயிர்களை குறிப்பாக தீவனச்சோளம், கடலைக்கொடி, துவரஞ்செடி போன்றவற்றை கோடைகாலத் தீவனமாக பயன்படுத்த அறுவடைக் காலத்தில் படப்பு அல்லது போர் அமைத்து சேமிக்கலாம்.
ஏற்றதீவனப்பயிர்கள்:
பூக்கும் தறுவாயில் அறுவடைசெய்ததீவனசோளம,; கடலை அல்லது பருப்பு எடுத்தபின் மீந்துள்ள கடலை, துவரை மற்றும் உளுந்தஞ் செடி அல்லது கொடிகள்
செய்முறை:
1. பூக்கும் தறுவாயில் அறுவடை செய்த தீவனசோளம,; கடலை அல்லது பருப்பு எடுத்தபின் மீந்துள்ள கடலை, துவரை மற்றும் உளுந்தஞ் செடி அல்லது கொடிகளை உடனடியாக வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும்.
2. நன்கு உலரவைக் கட்டுக்கட்டாகக் கட்டி சரியாக குவித்தல் வேண்டும். உலர் எடை 85 முதல் 95 சதவீதம் இருத்தல் நல்லது.
3. பின்பு, மேடுநிறைந்த மறைவான இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கி வைக்க வேண்டும்.
4. ஒவ்வொரு அடுக்கு இடையிலும் யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலை தெளிக்கலாம். 100 கிலோதீவனத்துக்கு 2 முதல் 4 சதவீதம் இந்த உப்புக்கரைசலை தெளிக்கலாம்.
யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலைத் தெளிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலை தெளிப்பதால் நைட்ரஜன் சத்து மிகுந்த தீவனம் கிடைக்கிறது. மேலும் செரிமான ஊட்டசத்துக்கள் அளவும் திறனும் அதிகரிக்கிறது.
2. எல்லாக் காலங்களிலும் சத்துமிக்கஉலர்தீவனம் கிடைக்கிறது.
முடிவுரை:
நமதுநாட்டில் சிலஅரசுப் பண்ணைகளில் மட்டுமேஊறுகாய்ப்புல் மூலம் பசுந்தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டுகால்நடைகளுக்குஅளிக்கப்படுகிறது.ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நேரடியாகவும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் மானியம் வழங்கிஊக்குவிக்கிறது. இம்முறையை பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால், கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு உதவி பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம். தொலைபேசி 0427-2410408.
தொகுப்பு: முனைவர் ப.ரவி, முனைவர் து.ஜெயந்தி
மருத்துவர் பி.ஸ்ரீபாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.