எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் லெட்சுமணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வி.கணேசன் முன்னிலையில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, , தலைமையில் நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி, , வழங்கி தெரிவித்ததாவது:
மனுநீதி நாள் முகாம்
கடலூர் மாவட்டத்தின் கடைகோடியான இந்த கிராமத்தில் இன்று இம்மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது. இம்மனுநீதிநாள் முகாம் தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட 527 மனுக்களில் 167 மனுக்கள் ஏற்கப்பட்டும், 112 மனுக்கள் பரிசீலினையிலும், 248 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. நகர்புறத்தைப்போல் கிராமத்தையும் முன்னேற்றமடைய செய்ய பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாற்றம் வீட்டுமனைப்பட்டா 92 பயனாளிகளுக்கு ரூ.11,74,335- மதிப்பீட்டிலும், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் 14 பயனாளிகளுக்கு ரூ.14,000- மதிப்பீட்டிலும், குடும்ப அட்டை 8 பயனாளிகளுக்கும், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.48,350- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,39,084.20- மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.18,66,657- மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.8,846- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.3,450- மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.70,500- மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4,00,000- மதிப்பீட்டிலும், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.20,10,000- மதிப்பீட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.39,60,000- மதிப்பீட்டிலும், மங்கள+ர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.23,80,000- மதிப்பீட்டிலும், வேளாண்மை இயந்திர வாடகை மையம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 308 பயனாளிகளுக்கு ரூ.1,43,35,222- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வி.கணேசன் முன்னிலையில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, , வழங்கினார்.வருகை புரிந்த அனைவரையும் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜவஹர்லால், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கூஷ்ணா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராமு, திட்டக்குடி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவகுமார், மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்டட அலுவலர் மணிவண்ணன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஞானஸ்கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் ஜெ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.


