எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர் - அரியானாவில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பலவீனப்படுத்தி வருகிறது என்று முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வர் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் பா.ஜனதா அரசு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் மாற்றி அறிவித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஹூடா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சதார் கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜனதா அரசின் செயல்பாடுகளால் விவசாயிகள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக கரும்பு விவசாயிகள் தங்களது உற்பத்தியை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நீண்ட காலமாகியும் அவர்களுக்கு உரிய கொள்முதல் விலையை கொடுக்க மாநில அரசு மறுத்து வருகிறது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். ஆனால் மாநில அரசு இதில் எந்த கவனமும் காட்டவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


