எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தருவதை நிறுத்த வேண்டும் என கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே ராஜிய மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜான் கெர்ரியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூவும் பாகிஸ்தானில் தீவிரவாதம் உருவெடுத்து வருவது குறித்து நேற்று முன்தினம் விவாதித்தனர். இதன் பின்னர் ஜான் கெர்ரி பழைய டெல்லியில் உள்ள 3 புனிதலங்களுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் கன மழை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் அவர் நேற்று டெல்லியில் ஐ.ஐடியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஆகும், அந்த நாடு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும். அந்த நாட்டில் தீவிரவாதத்தால் 50ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளால், இந்தியா-பாகிஸ்தான் உறவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் அமைதி மேம்பாடு நடவடிக்கையும் பாதிக்கிறது.
முன்னணி நாடுகள் , எல்லை பகுதி தீவிரவாதத்தை நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று நவாசும் டெல்லி வந்தார். இது பாராட்டத்தக்கது. இதனால் இரு தரப்பு இடையே தொடர்பு நல்ல முறையில் அமைந்தது. வறுமை மற்றும் தீவிரவாத சவால்களை தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


