எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நியூயார்க் - சர்வதேச விதிமுறைகளை மீறிய வகையில் ஐந்தாவது முறையாக அணு ஆயுத பரிசோதனை நடத்திய வடகொரியாவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அந்நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி வடகொரியா இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன. இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது. அந்தவகையில், புங்யே-ரி பகுதியில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் காலை சுமார் 6 மணியளவில் வடகொரியா சக்திவாய்ந்த அணு குண்டை மீண்டும் பரிசோதித்துள்ளதாக தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புவிசார் கண்காணிப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.
இந்த அணுகுண்டு பரிசோதனையின் விளைவாக வடகொரியாவின் பல பகுதிகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தாக்கத்தை வைத்து கணக்கிடுகையில் 20 முதல் 30 மெட்ரிக் டன் சக்திகொண்ட அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை நடத்திய அணு ஆயுத சோதனைகளிலேயே இதுதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வடகொரியா அணு ஆயுத சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இதற் கிடையில், ஐ.நா. விதிமுறைகளை பின்பற்றாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ’வடகொரியா மறைமுகமாக நடத்திய அணு ஆயுத பரிசோதனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் இதுவரை ஐந்துமுறை வடகொரியா இதுபோன்று அத்துமீறலாக அணு ஆயுத பரிசோதனைகளை தொடர்ந்து நடத்தியுள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையும், அணு ஆயுத பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச விதிமுறைகளையும் மீறும் செயலாகும்’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக்கொள்ளவே முடியாத இதுபோன்ற ஆபத்தான செயல்பாடுகள், கிழக்காசிய கண்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைவதுடன், அணு வல்லமையை நிரூபிக்கும் இதுபோன்ற பரிசோதனைகளை தடுக்கும் சர்வதேச அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதையும் காட்டுகிறது.
இதுபோல் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளை நாம் உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். இந்த அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ஐ.நா.சபையின் செயலாளர் என்ற முறையில் கடந்த பத்தாண்டுகளாக வடகொரியா விவகாரத்தில் மாற்றம் ஏற்பட என்னால் இயன்றதை செய்துள்ளேன். எனினும், அந்தநாடு இதைப்போல் நடந்துகொள்வது ஏன்? என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
கொரியா பிராந்தியத்தில் நிலவிவரும் தற்கால சூழலை முன்வைத்து, உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் சர்வதேச சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பை என்னால் சரிவர செய்ய முடியவில்லையோ? என்றே நான் கருதுகிறேன். இதற்காக வருத்தப்படுகிறேன். கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதிப்பதை விட்டுவிட்டு அந்நாட்டு மக்களின் நல்வாழ்வு தொடர்பான நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட வேண்டும்’ எனவும் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025