எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் அனைத்து நல்ல காரியங்களிலும் முதல் இடம் பிடிக்கும் பழம் - எலுமிச்சம் பழம். உலகெங்கிலும் நிறைந்து காணப்படும் பழமாகும். இன்று 60 வகையான எலுமிச்சைகள் உள்ளன. இவற்றில் நாம் பயன்படுத்துவது இரண்டு மட்டும் தான். ஒன்று நாட்டு எலுமிச்சை மற்றது கொடி எலுமிச்சை. இது நாரத்த மர வகையைச் சார்ந்தது. இந்த பழத்திற்கு வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு பெயர்களும் உண்டு. தெலுங்கில் - நிம்மப்பண்டு, கேரளாவில் - எலுமிச்சை தேசிக்காய், வடநாட்டில் - நிம்பு, ஆங்கிலத்தில் - லெமன் என்றும் பெயர் உள்ளது.
இந்தப்பழம் சமையல் வகை, வைத்திய முறை, மற்றும் சுப காரியங்களுக்கும் பயன்படுகிறது. இதில் செம்புச்சத்து அதிகம் இருப்பதால் திருஷ்டி பரிகாரங்களுக்கும், மந்திர தந்திர காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். நமக்கு ஏற்படும் அநேக நோய்களை குணமாக்கும் நல்ல மருந்தாக எலுமிச்சை திகழ்கிறது. மேலும் குறைந்த செலவில் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பழமாகவும், குறைந்த விலையில் நிறைய சத்துக்களுடன் கூடிய பழமாகவும் எலுமிச்சை உள்ளது.
எலுமிச்சை சாறை குடித்தால் உடல் எடையை குறைக்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தனிக்க எலுமிச்சைக்கு தனிச்சிறப்பு உண்டு.
எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்:
எலுமிச்சை சாற்றை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது (சிட்ரிக்), உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு நல்ல வடிவத்தை கொடுக்கும். எலுமிச்சையின் சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடலில் உள்ள வறட்சி நீங்கி, உடலின் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அளவிற்கு அதிகமாக பேதியானால் ஒரு எலுமிச்சம்பழச்சாற்றை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் பேதி உடனே குணமாகும். பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிக அளவு குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்கும்.
ஓரு எலுமிச்சம் பழச்சாற்றில் அரை தேக்கரண்டி உப்பு கலந்து காலை எழுந்த உடன் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவந்தால் மலச்சிக்கல் நீங்கும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஓமத்தை சூடான நீரில் கலந்து குடித்துவர செரிமானப் பிரச்சினை மற்றும் வாயுப் பிரச்சினை குணமாகும். உடலில் உள்ள சோர்வு மற்றும் களைப்பை போக்க எலுமிச்சம் பழத்தை கடித்து சாற்றை சாப்பிட்டால் உடனே களைப்பை போக்கும். எலுமிச்சை சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் உடையது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது, இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது. அரை எலுமிச்சை சாற்றுடன் ஒரு டம்ளர் பால் இல்லாத காபியில் கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வர தலைவலி குணமாகும். எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள் உள்ள இடங்களில் தடவ சரியாகும். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலமாகும்.
எலுமிச்சை சாற்றில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்து, இந்த கலவையை வெயிலில் காயவைத்து நன்றாக பொடித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த பொடியை காலை மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீருடன் குடித்து வந்தால் பித்தம் குறையும். தேள் கொட்டியவுடன், எலுமிச்சம்பழத்தை நறுக்கி கொட்டிய இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறாக தேய்த்தவுடன் விஷம் இறங்குவதோடு கடுப்பும் நின்று விடும். எலுமிச்சை சாறு மாதவிலக்கின்போது ஏற்படும் வலியை குறைக்கும். உடல் நமச்சலைப் போக்கும். தாதுவைக் கெட்டிப்படுத்தும். எலுமிச்சை சாறு தினமும் பருகினால் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும்.
நெஞ்சில் கபம் கட்டி இருமலில் கஷ்டப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, காலை மாலை இருவேளைகளும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் கபம் வெளியாகிவிடும். எலுமிச்சை சாறை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணத்தால் வரும் சிறுநீர் தொந்தரவு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் இருக்காது. எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு மற்றும் நீர்ச்சுருக்கு குணமாகும். எலுமிச்சம்பழ ரசத்தைச் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சனை தீரும். வெயில் காலங்களில் குழந்தைகள் நீர்ச்சுருக்கு ஏற்பட்டு அதிக அவதிப்படுவார்கள். அதுசமயம் எலுமிச்சை விதைகளை பசை போல அரைத்து, தொப்புலைச் சுற்றி தடவ வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றினால் உடனே குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.