Idhayam Matrimony

கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
Annamalai 2024-01-16

Source: provided

சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. 41 உயிர்கள் சம்பந்தப்பட்டது. கரூர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் மகிழ்ச்சி. கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கோரினார். திருப்புவனம் கோவில் காவலாளி  அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.க்கு கொடுத்தார்கள். அரசியல் செய்வது நாங்களா இல்லை ஸ்டாலினா? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை; குறையும் சொல்லப் போவது இல்லை. போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்,” என்றார். மேலும், டி.ஆர். பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கு குறித்து பேசிய அண்ணாமலை, “நீதிமன்றத்தில் அடுத்த வாய்மொழி விசாரணையில் இருந்து நானே குறுக்கு விசாரணை நடத்தப் போகிறேன். நவம்பர் 11 ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெற உள்ளது,” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து