எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைத்து காணொலி காட்சியின் மூலம் தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் மேல் வகுப்பு மற்றும் பொது வகுப்பு காத்திருப்பு அறை, மதுரை ரயில் நிலையத்தில் இரு மின் தூக்கிகளையும் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு , மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, மாநிலங்களை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், ஆகியோர் முன்னிலையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று (12.03.2017) திறந்து வைத்தார்கள்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசியதாவது,
முன்னாள் முதலமைச்சர் அம்மா மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நான் அமைச்சராக இருந்தபொழுது அம்மா அவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் முதலமைச்சர் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும், பாரத நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ்நாட்டில் வளர்ச்சியின் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறைக்கு 2017-18ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முதலீடாக ரூ.2,287 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலையங்களை பயணிகளின் வசதிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே நிலையங்களில் பல புதுமையான வசதிகளை செய்து வருகின்றது. அதில் ஒரு கட்டமாக இன்று கும்பகோணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு வசதிக்காக கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையமும், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர், ரயில் நிலையத்தில் மேல் வகுப்பு காத்திருப்பு அறை மற்றும் அனைத்து வகுப்பினர் பயன் அடையும் வகையில் ஓய்வறை, பல சிறப்புகளை கொண்ட மதுரை, ரயில் நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு மின் தூக்கிகள் தற்பொழுது மதுரை ரயில் நிலையத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகா நகருக்கு சென்று தாயகம் திரும்பி வந்த போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் எழுச்சிமிகு உரையாற்றினார். அதனை நினைவு கூறும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அருட்காட்;சியகம் அமைக்கப்படும். இது அமைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தரலாம். மேலும் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசினார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் வழியில் நடக்கின்ற தமிழக அரசு மக்களின் தேவையினை அறிந்து செயல்படும் அரசாக இருந்து வருகின்றது. தஞ்சாவூர் மக்களின் கோரிக்கையான தஞ்சாவூர் - விழுப்புரம் ரயில் பாதையை முன்னுரிமை அடிப்படையில் இரட்டை வழி பாதையாக விரைவில் மாற்றி தர வேண்டும். மயிலாடுதுறை- தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு, பல ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. அதனை விரைவுப்படுத்தி அகலப்பாதையாக மாற்றித் தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கை அதிகரித்து தர வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையம் நாட்டிலேயே தூய்மை பராமரிப்பில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. எனவே கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வை-பை வசதிகள் செய்து தர வேண்டும். திருச்சி-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் சிறப்பு இரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
கும்பகோணம்-விருத்தசலம் புதிய ரயில் பாதை அமைத்து தர வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு இரயில்கள் மற்றும் ஏனைய விரைவு ரயில்கள் பாபநாசம் மற்றும் ஆடுதுறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். நரசிங்கன்பேட்;டை, சுவாமிமலை நிலையங்களில், திருநெல்வேலி பயணிகள் ரயில் நின்று செல்ல வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் சேவையினை இரவு 11.00 மணிலிருந்து காலை 6.00 மணி வரை இரண்டு கவுண்டரில் வழங்கிட வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதிகளுக்கு பதில் இருக்கை வசதிகளை பெட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வாரந்திர ராமேஸ்வரம், மண்டுதியா எக்ஸ்பிரஸ் ரயில் வசதியினை அதிகப்படுத்தி தர வேண்டும். முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு கைவிடப்பட்ட அனைத்து சென்னை-தூத்துக்குடி-ஜனதா விரைவு ரயில், சென்னை-செங்கோட்டை பாசஞ்சர். தஞ்சை-விழுப்புரம் பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும். புதிய ரயில் வசதிகளாக கும்பகோணம் - குருவாயூர், தஞ்சாவூர்-ஹீப்ளி, தஞ்சாவூர்-மும்பாய், திருச்சி-திருநெல்வேலி இடையிலோன இன்டர் சிட்டி ரயிலினை மயிலாடுதுறை வரை நீட்டித்து, புதிய ரயில் சேவை அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கையாக நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வைத்துள்ளோம்.
மத்திய அரசின் திட்டங்களை அம்மா வழியில் வந்த தமிழக அரசு சிறப்பான முறையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றது. 144 ஆண்டுகள் கண்டிராத கடுமையான வறட்சி தமிழகத்தில் நிலவி வருகின்றது. விவசாயிகளும் பொது மக்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்கள். கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அம்மா அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.
ரயில்வே துறை அமைச்சர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான ரயில் திட்டங்கள் குறித்த கோரிக்கையினை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்கள்
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இராம.இராமநாதன், ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியத் தலைவர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன், ரயில்வே பொது மேலாளர் வசித்தாஜோரி, திருச்சிராப்பள்ளி ரயில்வே மண்டல மேலாளர் ஏ.கே.அகர்வால், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


