எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடி ராஐhகோபால் நிலைய வளாகத்தில் வேலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்கள் முன்னிலை வகித்தார்.விழாவில் கலெக்டர் அவர்கள் மின்னணு அட்டைகளை வழங்கி பேசியதாவது. நியாயவிலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைவான விலையில் உணவு பொருள் வழங்கும் முறை என்பது இரண்டாம் உலகபோரின் போது ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் அரசு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்க ஏற்பாடுகளை செய்தது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முதலாக மும்பையில் 1939 ஆம்ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இந்த திட்டத்தை நிறுத்தி விட அரசு முற்பட்டபோது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் தொடர்ந்து நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் முதல் 5 ஆண்டு திட்டத்தில் அரிசி மற்றும் கோதுமைகளை வழங்கலாம் என்று முடிவு செய்து அவ்வாறே நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2013 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள் 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஏறக்குறைய 11 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இந்த குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக நவீன காலத்திற்கு ஏற்றார் போல மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க ஆணை பிறப்பித்து அவற்றின் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் குடும்ப அட்டைகள் குறித்தும் பொருட்கள் வழங்குவது குறித்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவைகள் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது குடும்ப அட்டைகளை மின்னணு குடும்ப அட்டை (ளுஆயுசுவு ஊயுசுனு) எனும் கையடக்க அட்டையாக மாற்றப்பட்டு நமது வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் வட்டத்தில் 7703ம் ,வாலாஐh வட்டத்தில் 15838ம் அரக்கோணம் வட்டத்தில் 11215ம் மின்னணு அட்டைகளும் இன்று முதல் வழங்கப்படுகிறது மேலும் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 8,87,933 குடும்ப அட்டைகளுக்கும் படிப்படியாக இரண்டு மாதத்தில் வழங்கப்படும். இந்த மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப தலைவரின் புகைபடம் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த அட்டை தொலைந்து போனாலும் அரசின் பொது சேவை கணினி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெயர் சேர்த்தல் நீக்கல் மேலும் குடும்ப தலைவரின் புகைப்படத்தை மாற்றுதல் போன்றவைகளை அட்டைதாரர்களே இணைய தளத்தின் வழியே தற்போது செய்து கொள்ள எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் அந்தந்த நியாவிலை கடைகளிலே வழங்கப்படும். புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளபோது குடும்ப அட்டைதாரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வழியாக அடையாள எண் அனுப்பி வைக்கப்படும். இந்த அடையாள எண்ணினை வரபெற்ற 7 நாட்களுக்குள் நியாய விலை கடை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய குடும்ப அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைக்க பெறாதவர்கள் பழைய குடும்ப அட்டையை கொண்டே இன்னும் இரண்டு மாதங்களுக்கு உணவு பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், பேசினார். இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருகுணஐயப்பத்துரை, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன், வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ராஐh, துணை தலைவர் மணி, மாவட்ட பதிவாளர் பொது விநியோக திட்டம் முனிராஐ;, வேலூர் வட்டாட்சியர் பழனி, தனிவட்டாட்சியர் குடிமை பொருள் இளஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.இந்த விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்,இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் காமாட்சி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025