முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது

திங்கட்கிழமை, 12 மே 2025      தமிழகம்
Begar 2023 05 12

Source: provided

சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் ( 65 ). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (60). வீட்டின் மாடியில் அவரது மகன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கரனும் அவரது மனைவி வித்யாவும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் வித்யா உயிரிழந்துவிட்டார்.

படுகாயத்துடன் இருந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியில் உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்து, சூரமங்கலம் போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , துணை ஆணையர் சிவராமன் மற்றும் போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐந்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியில் வசித்து வந்த சந்தோஷ்குமார் (30), என்பவர் கொலை செய்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. மளிகை கடை நடத்தி வந்த வித்யா, அதிக நகை அணிந்திருப்பது அவருக்கு தெரிந்ததாகவும், அந்த நகையை பறித்தால் கடன் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, வித்யா மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோரை கத்தியால் தாக்கி, வித்யா அணிந்திருந்த 3 சவரன், அவரது கணவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பியது தெரிய வந்தது. சந்தோஷ்குமார், சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பிஹாரில் இருந்து சேலம் வந்து, டைல்ஸ் கூட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். அவர், 35 வருடங்களுக்கு முன்பு பிஹாரிலிருந்து சேலத்தில் குடியேறிய, சுனில்குமார் என்பவரின் மகளை திருமணம் செய்துகொண்டு, 3 குழந்தைகளுடன் சேலத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரிடமிருந்து அவர் கொள்ளையடித்துச் சென்ற , 3 சவரன் மற்றும் 7 சவரன் தங்க நகைகளையும் , சம்பவத்தின்போது அணிந்திருத்த ரத்தக் கறை படிந்த உடைகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து