எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் காத்தாடி மட்டம் மற்றும் அதிகரட்டி கிராம பகுதிகளில் இன்று தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு செய்தியாளர்களிடையே கூறியதாவது,
“நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். அதனை கருத்திற்கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்துவதையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டுமென்பதையும் தமது கடமையாக கொண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆசியுடன், தமிழக அரசு முழு முயற்சியுடன் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரநிலை என்பது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களையே சார்ந்துள்ளது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு மானிய திட்டங்கள் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் மலர்கள் உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும் திட்டங்கள் வாயிலாக காய்கறிகளின் உற்பத்தி திறன் 20 சதவீதமாகவும், மலர்கள் உற்பத்தியை 30 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் மலைப்பகுதி சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஓருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் என விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், பூகோஸ், புருக்கோலி போன்ற பயிர்கள் 240 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.உணவாக பயன்படுத்தும் இந்த காய்கறி பயிர்களில் வைரமுதுகு பூச்சியினை கட்டுபடுத்த விவசாயிகள் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். நேரடி உணவாக பயன்படுத்தப்படும் இப்பயிர்களில் தெளிக்கப்படும் இரசாயன பூச்சி கொல்லிகளின் நச்சுதன்மை உடலில் சேர்ந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுபடுத்தும் வகையில் சில தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே குறிப்பாக வைரமுதுகு பூச்சி விரும்பி உண்ணும் தாவரங்களான கடுகு, செண்டுமல்லி பயிர்களை ஊடுபயிராக முட்டைகோஸ் நடவு செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு 20 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதை மற்றும் செண்டுமல்லி விதை வரப்பு ஓரங்களிலும், நடவு செய்து 20 நாட்கள் கழித்து 10 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதைக்கவும், செண்டு மல்லி சுற்றிலும் நடவு செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் முட்டைகோஸ் பயிரினை தாக்கும் பூச்சிகள் கடுகு மற்றும் செண்டுமல்லி பயிரினை உட்கொள்ளுவதால் முட்டை கோஸ் பயிர் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுகிறது மேலும் இரசாயன பூச்சி கொல்லிகளினால் ஏற்படும் கெடுதல் குறைவதோடு அதற்கான செலவும் மிச்சமாகிறது
இத்தொழில் நுட்பத்தினை விவசாயிகளிடம் எடுத்துக்காட்டும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உதகை வட்டாரம் பாலக்கொலா கிராமத்திற்குட்பட்ட பரமூலை பகுதியில் ராஜன் என்ற விவசாயி 1.50 ஏக்கர் பரப்பிலும், குன்னூர் வட்டாரம் அதிகரட்டி கிராமத்தில் உமாதேவி என்ற விவசாயி 0.30 ஏக்கர் பரப்பிலும் செயல் விளக்க திடல் அமைத்திருந்தனர். இத்திடல்களில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மான்ய விலையில் வழங்கப்பட்ட விளக்குபொறி, இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள் வண்ண பொறிகள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுபாடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 140 விவசாயிகளுக்கு பயிற்சியும், 120 விவசாயிகளுக்கு விளக்குபொறி, இனகவர்ச்சி பொறியும் மற்றும் மஞ்சள் வண்ண பொறிகளும் ரூ.7.09 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்து குறைந்த செலவில் நஞ்சற்ற உணவு பொருள் உற்பத்தியினை பெருக்க வேண்டும்”. ஏன மாவட்ட கலெக்டர் பேசினார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


