எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கரிலும் , வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏக்கரிலும் மானாவாரி நிலப்பகுதிகளில் பயிர் மகசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மானாவாரிப்பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.
‘ மழையை மட்டுமே நம்பியுள்ள வானம் பார்த்த பூமியில் - மானாவாரி விவசாயத்தில் தானியங்கள் , பயறுவகைகள் , எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடியையும் , உற்பத்தியையும் அதிகரித்து , விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ‘நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-17 ம் ஆண்டு முதல் 2019- 20 ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் இதற்கு 802.90 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 2500 ஏக்கர் மானாவாரி சாகுபடி நிலங்கள். ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளைக் கொண்டு ஒரு தொகுப்பாக (கிளஸ்டர்) ஒருங்கிணைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் ஏக்கரில் இந்த மாபெரும் திட்டம் செயலாக்கம் செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் 25 மாவட்டங்களில் 2500 ஏக்கரில் அமைத்த 200 தொகுப்புகள் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதில் தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ,வட்டாரக் குழுக்கள் , உழவர் மன்றக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு , விவசாயிகள் ஆலோசனையின்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஒருபகுதியாக நடப்பு ஆண்டில் நம்பியூர் ஒன்றியத்தில் வேமாண்டம்பாளையம் , அஞ்சானூர் ,இலாகம்பாளையம் , இருகாலூர் - ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கர் மானாவாரி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு , இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் 5 கலப்பை கொண்ட டிராக்டரில் உழவு செய்யும் விவசாயிகளுக்கு , பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 500 ரூபாய் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது. (படம் இணைப்பு) மேலும் விதைகள் , உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் 50 சத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆலோசனைகளும் , இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமும் மானியம் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்துதல் , பயிர் உற்பத்தி செயல்விளக்கத் திடல்கள் அமைத்தல் , பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம் , பண்ணைக்குட்டைகள் , தடுப்பணைகள் அமைத்தல் , மினிகிட்டுகள் , தெளிப்புநீர்பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன. மானாவாரி விவசாயத்தில் மகசூல் குறைவாக உள்ளதாலும் , உணவுப் பயிர்களின் சாகுபடிப்பரப்பு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதாலும் அதற்கேற்ப புதிய இரக விதைகள் , இடுபொருள்கள் , நவீன தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நம்பியூர் வட்டாரத்தில் இத்திட்டத்தின் அடுத்த பகுதியாக அடுத்த ஆண்டில் நிலக்கடலை சாகுபடி அதிகம் செய்யப்படும் இரண்டு கிராமங்களில் மேலும் 5 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதற்கான முன் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன “ - எனத் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன் , வேளாண்பொறியியல்துறை உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் உழவர் குழுப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறினர். வேமாண்டம்பாளையம், இலாகம்பாளையம் , அஞ்சானூர் ,இருகாலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பவ்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
நிறைவாக குருமந்தூர் துணை வேளாண்மை அலுவலர் மாதவன் நன்றி கூறினார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கோபி சிவம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.