எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாள் பூரா உங்கள் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் மன அழுத்தத்தை தருவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நிரந்தரமான மற்றும் அதிக சம்பளம் தரும் வேலைகள், பெரும்பாலும் உங்களை இருக்கையில் கட்டிப்போடுபவைகளாகவே இருக்கின்றன.
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருப்பு டப்பாவை (அத்தாங்க கம்ப்யூட்டர்) பார்த்து வாங்கும் சம்பளத்தை விட அதிகளவில் வருமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை அளிக்கும் 13 வேலைவாய்ப்புகளை பற்றி அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முழுவது சராசரி வருமான விவரங்களை வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனால் இவை அனைத்து பணிகளுக்கும் ஒரு "அசாதாரன அறிவும், வியக்கவைக்கும் திறமையும் வேண்டும்".
13 வேலைவாய்ப்புகள் : ஒரு வகுப்பறையிலோ, ஒரு பயிற்சிக் களத்திலோ அல்லது பூமியின் மேல் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமான காக்பிட்டிலோ அமர்ந்து நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.
டாக்டர் : சராசரி ஆண்டு வருமானம்: 191,880 டாலர்கள் (ஒரு டாலர் 60 ரூபாய் என வைத்து கணக்குப் போட்டு நீங்கள் வயிறெரிவது தெரிகிறது). மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு அர்த்தமுள்ள, ஈடுபாடுடன் கூடிய பணியைச் செய்வதால் அதற்கேற்ற சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். எலும்பு சிகிச்சை நிபுனர், மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் இன்னும் அதிகமாக ஊதியம் பெறுவார்கள். இதில் மயக்க மருந்து சிறப்பு மருத்துவர் சராசரியாக 235,070 டாலர்களை ஆண்டிற்கு சம்பளமாகப் பெறுகிறார்கள்.
“மயக்கவைக்கும் ”நர்சு javascript:void(0); “மயக்க வைக்கும்” நர்சு ஆண்டு சம்பளம்: 157,690 டாலர்கள்: அனைவரையும் மயக்கமடையச் செய்யும் ஒரு அதிரவைக்கும் பணியைச் செய்யும் நர்சுகள் கூட சராசரி ஆண்டு வருமானமாக 1,00,000 டாலர்களுக்கும் மேல் பெருகிறார்கள். இவர்களில் சில பேருக்கு மயக்க மருந்தளிக்கும் டாக்டருக்கு உதவியாக இருப்பது மட்டுமே பணி.
பெட்ரோலிய இன்ஜினியர் : ஆண்டு சராசரி வருமானம்: 149,180 அமெரிக்க டாலர்கள். எப்படியாவது பூமிக்கு அடியில் இருந்து எண்ணையை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் எடுத்துவிடுவது இவர்கள் வேலை. இன்றைய தேதிக்கு மிகவும் முக்கியமான திறமை இவர்களுடையது. தேவையான உபகரணங்களை உருவாக்குவதும் மென்பொருளை கண்டுபிடிப்பதும் இந்த வேலையில் அடக்கம்.
விமான பைலட் : ஆண்டு சராசரி வருமானம்: 129,600 அமெரிக்க டாலர்கள்: நெருக்கடியான இடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும், குறைந்தபட்சம் நல்ல சம்பளமாவது கிடைப்பதுடன் உலத்தை நன்கு சுற்றிப் பார்க்கலாம்.
சட்டப் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 122,280 அமெரிக்க டாலர்கள்: ஒரு சட்டப் பேராசிரியராக இருப்பது நல்ல விஷயம் தான். அடுத்த தலைமுறை வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் கற்றுத்தரும் வாய்ப்புடன் அருமையான சம்பளமும் கிடைக்கும். யாருக்குத் தெரியும், பில் கிளின்டனைப் போலவோ அல்லது பாரக் ஒபாமாவைப் போலவோ முதலில் சட்டப்பாடம் எடுத்துவிட்டு பின்னர் பெரும் பொறுப்புகளையும் பணிகளையும் நீங்கள் கையாள நேரிடலாம்!
புவிஆய்வாளர் : இப்பணிக்கான ஆண்டு வருமானம் 108,420 அமெரிக்க டாலர்கள்: இந்த புவி அறிவியலாளர்கள், ஒரு பெரிய அளவிலான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகளையோ, பொறியியல் அல்லது சுற்றுச் சூழல் ஆலோசனை நிறுவனங்களிலேயோ, சுரங்கம் அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ பணிபுரியலாம்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் : ஆண்டு சராசரி வருமானம் 105,880 அமெரிக்க டாலர்கள்: கற்றுத்தரும் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் அல்லது விலங்கின மருத்துவர்கள் பணி எளிதாக ஒரு ஆறு இலக்க சம்பளத்தைப் பெற்றுத் தரும். சராசரி சம்பளம் தொழிலைச் செய்துவரும் ஒரு இயன் மருத்துவரை ஒப்பிடுகையில் குறைவானாலு, அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
விண்வெளி பொறியாளர் : ஆண்டு சராசர் சம்பளம்: 105,450 அமெரிக்க டாலர்கள். விண்கலங்களையும் விமானங்களையும் தயாரிப்பதைவிட ஒரு ஆர்வமுள்ள பணி வேறு எதாவது இருக்க முடியாது. பெரும்பாலான எஞ்சினியர்கள், அலுவலத்தில் தங்கள் அதிகமான நேரத்தை செலவிடுகையில், மற்றவர்கள், நேரடியாகக் களத்திற்குச் சென்று அவை எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை கண்கானிப்பார்கள்.
ரசாயன பொறியாளர் (கெமிக்கல் இன்ஜினியர்) : ஆண்டு சராசரி வருமானம்: 104,340 அமெரிக்க டாலர்கள்: மருந்திலிருந்து எரிபொருள் வரை அனைத்திலும் இவர்கள் பங்கு இன்றியமையாதது. பலர் அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், மற்றவர்கள், சோதனைக்கூடங்களிலும் அல்லது அவர்களுடைய அறிவியலைப் பயன்படுத்தி உணவு அல்லது ரசாயனங்கள் உருவாக்கப்படும் தொழிற்கூடங்களிலும் பணிசெய்யும் வாய்பை பெறுகின்றனர்.
பொறியியல் பேராசிரியர் : ஆண்டு சராசரி சம்பளம்: 102,880 அமெரிக்க டாலர்கள். இந்த வேலை பெரும்பாலும் கற்றுத்தருதலையோ அல்லது ஆராய்ச்சி செய்வதையோ முக்கியமாகக் கொண்டவர்ளை உள்ளடக்கியது.
பொருளாதாரப் பேராசிரியர் : ஆண்டு சராசரி வருமானம்: 100,490 டாலர்கள்: கல்லூரி வகுப்பறைகளில் நல்ல வருமானமும், பொருளாதாரப் பேராசிரியர்களுக்கு எங்கு சென்றாலும் அவர்களில் கொள்கை மற்றும் முடிவெடுக்கும் திறமைகளுக்காக நல்ல புகழும் கிடைக்கிறது. தற்போதைய அமெரிக்காவின் அரசு நிதி ஆலோசனைத் தலைமை பொறுப்பு வகிக்கும் ஜானட் எல்லன், அரசாங்க வேலைக்கு முன்பாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி மேலாளர் (ப்ரொடக்ஷன் மேனேஜர்) : ஆண்டு சராசரி வருமானம்: 99,370 டாலர்கள்: ஒரு சராசரி தொழிற்கூட மேலாளர், ஏறக்குறைய ஆறிலக்க சம்பளம் பெறுகிறார். ஆனால், தொழிற்சாலையில் வேலை செய்வது அலுவலகத்தில் செய்வதை விட சுலபமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுரங்க மற்றும் புவியியல் ஆய்வுப் பொறியாளர் (மைனிங் அண்ட் ஜியாலஜிக்கல் எஞ்சினியர்): ஆண்டு சராசரி வருமானம் $96,950 டாலர்கள். சுரங்கத்தில் அல்லது நில உருவாக்க களங்களில் பூமிக்குக் கீழே என்ன நடக்கிறது என்பதையும் அவை சுற்றுச்சூழலுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாதுகாப்பானதுதானா என்பதை அறிந்தவர்கள் இவர்கள். சுரங்கத் தொழில் ஒரு ஆபத்தான தொழிலாக இருப்பினும், சம்பளம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லைதான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
டெல்லி கார் வெடி குண்டு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
17 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடி குண்டு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


