எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா மற்றும் தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவுக்கு முக்கிய சவாலாக விளங்குவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சமாளிக்க ராணுவத்துக்கு அதிநவீன தொழில் நுட்பங்கள் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் ராணுவத் துக்கான நிலைக்குழுவின் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் மேட்டிஸ் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில், ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா மற்றும் தீவிரவாத அமைப்புகள் ஆகியவை நம் நாட்டுக்கு சவால் தருபவையாக விளங்குகின்றன. இவற்றை ராணுவம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இந்த நாடுகள் அனைத்தும் கடந்த காலங்களில் நம் நாட்டின் ராணுவ வியூகங்களை எதிர்கொள் வதற்கு ஏற்ற வகையில் தங்கள் பலத்தையும் அணுகுமுறையை யும் மேம்படுத்திக் கொண்டுள்ளன.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நாம் அதிகாரம் செலுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ரஷியா தனது ராணுவ பலத்தை அதிகரித்திட அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இதுபோல சீனா தனது ராணுவ பலத்தை விரிவுபடுத்தவும் நவீனப் படுத்திக் கொள்ளவும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
நம் நாட்டையும் நேச நாடுகளையும் அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இதுதவிர, எதிரி நாட்டு அரசுகள் மற்றும் தொழில் துறைக்கு எதிராக இணையதள வழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. மேலும் ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவதுடன் சிரியா, இராக், யேமன் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்க தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இதுதவிர, ஐஎஸ், அல்காய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் நம் நாட்டுக்கும் நமது நேச நாடு களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத் தலாக இருந்து வருகின்றன. எனவே, இந்த 5 முக்கிய சவால் களையும் எதிர்கொள்ள, நமது ராணுவத்துக்கு அதிநவீன தொழில்நுட்பங்களும் திறமை யான வீரர்களும் தேவைப்படு கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.