எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெங்கையா நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தேர்தல்...
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஆளும் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 790 பேர் வாக்களித்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 790 வாக்குகள் உள்ளன. அவற்றில் மக்களவையில் இரு இடங்களும், மாநிலங்களவையில் ஓரிடமும் காலியாக உள்ளன.
98.21 சதவீத வாக்குப்பதிவு
நேற்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தேர்தலில் 98.21 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் உள்ள 790 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியது. இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பின் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியாயின. 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ்ஸ ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை.
வெங்கையா நாயுடு வெற்றி
அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை விட 272 அதிக வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். அவர் 516 வாக்குகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து வெங்கையா நாயுடு விரைவில் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். வெங்கையா நாயுடுவுக்கு பாஜக மற்றும் ஆதரவு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெங்கையாவுக்கு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோபால கிருஷ்ண காந்தி, ஒ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இளைஞரணி தலைவராக...
பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-ல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-88 வரை ஆந்திர மாநில பாஜக பொதுச் செயலாளராகவும், 1988-1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து 3 முறை கர்நாடகா மாநில எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993-2000 பா.ஜ.க பொதுச்செயலாளராக இருந்தார். அதன்பின்னர் மத்தியில் பா.ஜ.க ஆட்சியின்போது வாஜ்பாய் அமைச்சரவையில் 2000-2002-ம் ஆண்டு வரை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
வீட்டு வசதி துறை...
கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2014-2017 வரை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2016-17-ஆம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.
15-வது துணை ஜனாதிபதி
15-வது துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோபால கிருஷ்ண காந்தி கடந்த 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி 1937-ஆம் ஆண்டு பிறந்தவர். இந்தியாவில் துணை ஜனாதிபதிகளாக பதவி வகித்த 12 பேரும் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்தவர்களே. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1888-ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உள்ளது. அதேபோல வெங்கையா நாயுடுவும் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
516 எம்.பி.க்கள் வாக்களிப்பு
துணைஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவாக 516 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.
பாராளுமன்ற லோக்சபை மற்றும் ராஜ்யசபையில் மொத்தம் 785 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் இரண்டு சபைகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் 516 பேர் வெங்கையா நாயுடுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்திக்கு 244 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 771 எம்.பி.க்கள் வாக்களித்ததில் 11 பேர்களின் வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 785 எம்.பி.க்கள் இருந்தபோதிலும் 14 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. ஒரு எம்.பி.யின் ஒட்டு மதிப்பு 790 ஆகும். லோக்சபையில் 2 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. அதேமாதிரி ராஜ்யசபையில் 3 எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி உருளைக்கிழங்கு![]() 6 hours 47 sec ago |
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 6 hours ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 6 hours ago |
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
10 Jun 2023டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்
-
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
09 Jun 2023புதுடெல்லி : நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 10-06-2023.
10 Jun 2023 -
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் : ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
10 Jun 2023மாஸ்கோ : பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிபர் ஜோபைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி
10 Jun 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்
10 Jun 2023பாரீஸ் : கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி ப
-
புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
10 Jun 2023சென்னை : புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
தாமதமாக திறக்கப்படுவதால் சனிக்கிழமைகள்தோறும் பள்ளிகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
10 Jun 2023சென்னை : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
-
தற்கொலைக்கு தடை விதித்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் : தேச துரோக குற்றமாக அறிவித்தார்
10 Jun 2023சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி : அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்
10 Jun 2023நெல்லை : தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராம
-
ரயில் என்ஜின் டிரைவர்கள் பணியின்போது ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
10 Jun 2023மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரயில் என்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது : பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு
10 Jun 2023சென்னை : பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
-
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
10 Jun 2023லண்டன் : இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
-
அண்ணா சதுக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறப்பு: தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் உதயநிதி விளக்கம்
10 Jun 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை நேற்று அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
10 Jun 2023திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
-
தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
10 Jun 2023சென்னை : தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 15-ம் தேதி திறப்பு
10 Jun 2023திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
-
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க கவர்னர் தலைமையில் அமைதி குழு அமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
10 Jun 2023இம்பால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க மணிப்பூரில் கவர்னர் தலைமையில் அமைதி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
-
தேசியவாத காங். துணைத்தலைவராக சரத்பவார் மகள் சுப்ரியா நியமனம்
10 Jun 2023மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
10 Jun 2023புதுடெல்லி, நடுத்தர மக்களின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.