எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வெண்பன்றிகள் சிறந்த தீவன மாற்றுத்திறன் கொண்டவைகளாகும். வெண்பன்றிகள் தாம் உட்கொள்ளும் ஒவ்வொரு 2½ - 3 கிலோ தீவனத்தையும் ஒரு கிலோ உடல் எடையாக மாற்றக்கூடியவைகளாகும். பன்றிகளின் வளர்ச்சியில்; தீவன மேலாண்மையானது மொத்த செலவினத்தில் 75 சதவிகிதம் பங்கு வகுக்கின்றது. ஆகையால் தீவனத்தை மினவும் சிக்கனமாக அதே சமயம் உற்பத்திக்கு தேவைப்படும் அளவு அளித்தல் அவசியமாகும்.
பன்றிகளின் உணவுப்பாதை ஒற்றை இரைப்பை உடையதாக உள்ளதால், மற்ற அசைபோடும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போல அதிக அளவு நார்த்;தீவனத்தை உண்ண முடியாது. எனினும், பன்றிகளின் தீவனத்தில் போதிய அளவு புரதமும், உயிர்ச்சத்துகளும் இருக்க வேண்டும். தீவன மேலாண்மை முறையில் வயது, பாலினம் மற்றும் உடற்செயலியலைக் கருத்தில் கொள்ள வேண்டும். தீவனத்தின் தன்மை மற்றும் தீவனம் அளிக்கும் முறைகளைப் பொறுத்துத் தீவன மாற்றுத்திறன் மற்றும் இறைச்சியின் தரம் ஆகியவை மாறுபடுகின்றன.
பொதுவாக பன்றிகளின் உணவூட்டம் சமச்சீர் சரிவிதத்தில் அமைய வேண்டும். பன்றிகள் வேகமாக வளரக்கூடியதால் தீவனத்தில் உள்ள புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் அளவுகள் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பன்றிகளுக்குத் தேவையான எரிசக்தி, சாம்பல் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புகள் தீவனக் கலவையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பன்றிகளின் வளரும் பருவத்திற்கேற்ப தீவனப் பராமரிப்பு: குட்டிப் பன்றிகள்
பன்றி குட்டிகள் பிறந்த 7 முதல் 10 நாட்களுக்கு பிறகு அதாவது 2 கிலோ எடை முதல் 10 கிலோ எடை வரை உள்ள குட்டிகளுக்கு குட்டித்தீவனத்தை அளிக்கலாம். குட்டிகள் தாயிடமிருந்து பாலை அருந்திவிட்டு வந்த பிறகு குட்டித் தீவனம் மற்றும் குடி நீரையும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு குட்டியும் நாளொன்றுக்கு சராசரியாக 250 கிராம் முதல் 750 கிராம் வரை தீவனத்தை உண்ணும். குட்டித் தீவனமானது குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வயது (56 நாட்கள்) வரை கொடுக்க வேண்டும். குட்டிப் பன்றிக்கான தீவனத்தில் அதிக அளவு புரதச்சத்தும் (22 – 23 சதவீதம்), வைட்டமின்களும் இருக்க வேண்டும். நார்சத்தை குட்டிகள் செரிமானம் செய்ய முடியாது என்பதால் பசுந்தீவனம் அளிக்கக்கூடாது. குட்டிகளை எளிதில் நோய் தாக்கும் என்பதால்; உணவுக்கூட கழிவுகளை உணவாக அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வளரும் பன்றிகள்
பன்றிகளின் எடை 10 முதல் 60 கிலோ இருக்கும் போது இத்தீவனம் கொடுக்க வேண்டும். பன்றிகுட்டிகளை தாயிடமிருந்து பிரித்த பின் அவற்றை சிறு குழுக்களாக வைத்து தீவனம் அளிக்கலாம். இந்த தீவனத்தில் 20 – 22 சதவீதம் புரதச் சத்து இருக்க வேண்டும். வளரும் பன்றி தீவனத்தை, சராசரியாக தினமும் 850 கிராம் முதல் 1600 கிராம் வரை கொடுக்க வேண்டும்.
உணவுக்கூட கழிவுப் பொருட்கள், ரொட்டித் தொழிற்சாலைக் கழிவுகளை இவ்வயது பன்றிகளுக்கு முடிந்த அளவு கொடுத்து தீவனச் செலவை குறைக்க வேண்டும். சுமார் 10 கிலோ கழிவுப் பொருளுக்கு ஒரு கிலோ அடர் தீவனத்தை குறைத்துக் கொள்ளலாம். அதேபோல் வேலிமசால், மொச்சை, பெர்சீம், சுபாபுல் மற்றும் புல் வகைகள் பசுந்தீவனங்களை 3லிருந்து 5 கிலோ வரை அளித்து தீவனச் செலவை குறைத்துக் கொள்ளலாம்.
வளர்ந்த பன்றிகள்
பன்றிகளின் எடை 60 கிலோவிற்கு மேல் இருக்கும் போது பன்றிகளின் தேவைக்கேற்ப இனவிருத்திக்கெனவும், விற்பனைக்கெனவும் குழுக்களாக பிரித்து தீவனம் அளிக்கலாம். இத்தீவனத்தில் புரதச்சத்து 16 சதவீதம் மற்றும் எரிசக்தி 3170 கிலோ கலோரிஃகிலோ அளவிற்கு இருக்குமாறு கலவை செய்து பன்றிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கம் இருந்தால் புரதத்தின் அளவை குறைத்து தீவனக் கலவையை தயார் செய்து அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 1750 கிராம் முதல் 2200 கிராம் வரை கொடுக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம்.
இனப்பெருக்க பன்றிகள்
ஆறு மாதம் முதல் 8 மாத வயதிலான, அதிக எடை கொண்ட (70 – 80 கிலோ கிராம்) பன்றிகளை தேர்வு செய்து தனி குழுவாக அமைத்து பராமரிக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட தீவனமுறையைக் கையாள வேண்டும். தீவனத்தில் கொழுப்பு சத்து குறைவாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு தீவனக் கலவையில்; புரதம் 12 சதவீதம் மற்றும் எரிசக்தி 3210 கிலோ கலோரிஃ கிலோ அளவிற்கு இருக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம். தீவனத்தில் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதால் அவற்றின் இனப்பெருக்கத்திறன் அதிகரிப்பதுடன் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், குட்டிகளை ஈனுதல் எளிதாகும். ஆண் பன்றிகளில் இனவிருத்தித் திறனும் அதிகரிக்கும்.
சினைப் பன்றிகள்
சினைப்பன்றித் தீவனத்தை சரியான அளவு கொடுப்பதால் பன்றிகுட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆரோக்கியமான குட்டிகளாகவும் மற்றும் அதிக எடையுடனும் இருக்கும். சினைப்பன்றிகளுக்கு தினமும் சராசரியாக 2 முதல் 3 கிலோ வரை தீவனத்தை கொடுக்கலாம். தினமும் 0.25 கிலோ முதல் 0.3 கிலோ வரை எடை கூட்டினால் போதுமானது. சினைக்கால இறுதியில் பன்றிகள் குட்டிகள் ஈனும் போதும், ஈன்ற பிறகும் அதற்குத் தகுந்தாற் போல் தீவனத்தில் ஊட்டச்சத்திiனை அளிக்க வேண்டும். சினைப்பன்றிகள் குட்டி ஈனுவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாகவே தீவன அளவை குறைத்து விட வேண்டும். மேலும், தீவனம் எளிதில் செரிமானம் ஆவதுடன் அஜீரண கோளாறுகள் உண்டாகாதவாறு இருக்க வேண்டும். குட்டி ஈனும் தினத்தில் பன்றிகளுக்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். தீவனத்தை கொடுக்க கூடாது. குட்டி போட்ட அடுத்த நாள் 1 முதல் 1.5 கிலோ வரை தவிடு கலந்த தீவனத்தை கொடுக்க வேண்டும். பன்றி குட்டிகளின் வளர்ச்சி அதன் தாய்பன்றிக்குக் கொடுக்கப்படும் தீவனத்தின் செறிவு மற்றும் தரம், குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் தாய்பாலின் அளவு போன்றவற்றை பொறுத்தே அமையும். எனவே, குட்டிகள் ஈன்ற முதல் வாரத்திலிருந்து தீவன அளவை அதிகப்படுத்தி முழுத்தீவனம் அளித்திடல் வேண்டும்.
பால் கொடுக்கும் பன்றிகளின் தீவனக் கலவையானது 13 சதவீதம் புரதம் மற்றும் 3210 கிலோ கலோரி எரிசக்தி கொண்டவையாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு 2-3 கிலோ தீவனமாவது உடல் பராமரிப்புக்கும், 0.2 முதல் 0.5 கிலோ தீவனம் குட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சேர்த்து கொடுக்க வேண்டும். தீவனக் கலவையானது சரியான விகிதத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் பசுந்தழைகளை 3-5 கிலோ வரை கொடுக்கலாம்.
வெண்பன்றிகளுக்கு அடர் தீவனம் அளித்தல்
பன்றிகளுக்கான அடர் தீவனத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், அரிசி, கோதுமை, மரவள்ளிக்கிழங்கு போன்றவையும் புரதம் அதிகமுள்ள சோயா புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, மீன்தூள் மற்றும் கோதுமைஃஅரிசி தவிடு ஆகியவையும் உயிர்சத்து, தாது உப்புகளும் உரிய விகிதத்தில் இருக்க வேண்டும். பன்றிகள் பராமரிப்பில் தீவனத்திற்கான செலவைக் கட்டுப்படுத்த பண்ணையாளர்கள் சொந்தமாக எளிய முறையில் அடர்தீவனத்தை தயாரித்துக் கொள்ளலாம்.
பன்றிகளுக்கு அடர்தீவனக் கலவை தயாரிப்பதற்கான முறைகள்
வ.எண் உணவுப் பொருட்கள் குட்டிகளுக்கான தீவனம் (மூ)
(14 வது நாள் முதல் 56 வது நாள் வரை) வளரும் பன்றிகள் (மூ)
(60 கிலோ வரை வளர்ந்த பன்றிகள் (மூ)
(60 முதல் 110 கிலோ வரை சினைப் பன்றி மற்றம் பால் கொடுக்கும் பன்றிகள் (மூ)
1 தானிய வகைகள் : (சேளம், மக்காச்சோளம், கம்பு, உடைந்த கோதுமைஃஅரிசி) 65 50 50 50
2 புpண்ணாக்கு வகைகள் : (கடலைஃசோயாஃஎள்) 14 18 20 20
3 வெல்லக் கழிவு 5 5 5 5
4 தவிடு வகைகள் : (கோதுமை தவிடுஃஅரிசி தவிடு) 1 15 25 18
5 மீன் தூள் 5 5 5 5
6 தாது உப்பு கலவை 1 1.5 1.5 1.5
7 சமையல் உப்பு - 0.5 0.5 0.5
இத்துடன் கூடுதலாக ஏ பி டி வைட்டமின் கலவை 100 கிலோவிற்கு 10 கிராம் வீதமும், 100 கிலோ தீவனத்தில் 1.2 கிராம் எதிருயிரி மருந்து இருக்கும்படி தேவையான அளவில் சேர்க்க வேண்டும். பொதுவாக தீவனத்தின் தரமானது, ஒவ்வொரு மாதத்திலும் பன்றி 10 கிலோ எடை கூடும் அளவு இருக்க வேண்டும்.
அடர் தீவனம் அளிக்க வேண்டிய அளவு (ஒரு நாளைக்கு) வளர்ந்த ஆண் மற்றும் பெண் பன்றி - 2.5 கிலோ
சினைப் பன்றிகள் - 3.0 கிலோ
பால் ஊட்டும் பன்றிகள் - 3.5 கிலோ
தீவன முறை
• பன்றிகளுக்கு எப்போதும் வேண்டிய அளவிற்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்யவது மிக முக்கியம்.
• பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே தினசரி கடைபிடிக்க வேண்டும். தீவனங்களை திடீரென்று மாற்றுவது நல்லதல்ல. தீவனமிடும் நேரமும் தினந்தோறும் ஒரே நேரமாக இருந்தால் நல்லது.
• தீவனமானது சரியான அளவிற்கு தேவையான எரிசக்தி, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை வளரும் பருவத்திற்கேற்ப கொண்டிருக்க வேண்டும்.
• சமயலறை கழிவு அல்லது உணவு விடுதியில் மீதமான உணவுப் பொருட்களைப் பன்றிகளுக்கு கொடுக்கலாம். இவற்றில் எரிசக்தி அதிகமாக இருப்பதோடு தீவனச் செலவும் குறையும்.
• தீவனக் கலவையில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தேவைக்கேற்ப கலந்து கொடுக்கலாம்.
பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பன்றிகளுக்கு முறையான தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பன்றிகளில் வளர்ச்சி குறைவும், அதிகமான குட்டிகள் இறப்பும் ஏற்படுகிறது. இந்நிலையை போக்கவும், இலாபகரமாக பண்ணையை நடத்தவும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு தீவனமுறையை கையாளுவது அவசியம்.
மேலும் தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625. தொகுப்பு: மு.வீரசெல்வம், சோ.யோகேஷ்பிரியா, கோ.ஜெயலட்சுமி, மா.வெங்கடேசன், ம.சிவகுமார் மற்றும் ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.



