எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
- கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


